பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டு சிறை: ஐ.நா.!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டு சிறை: ஐ.நா.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 05:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2008 மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கருதப்பட்ட நிலையில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 78 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 161 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

எனினும், இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் பாகிஸ்தானின் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். ஆகவே, ஹபீஸ் சயீத்தை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்தது. மேலும், அமெரிக்காவும், ஐ.நா.வும் அவனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தன.

இந்த சூழலில், ஒரு வழக்கு விசாரணைக்காக, ஹபீஸ் சயீத்தை நாடு கடத்துமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. ஆனால், அவனை நாடு கடத்த பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதனிடையே, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவி செய்த குற்றத்திற்காக ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் திருத்தப்பட்ட பட்டியலின்படி, 2020 பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் உள்ளதாகவும், 7 தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த குற்றத்திற்காக, அவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு 78 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இப்பட்டியலின் மாற்றங்களின் லஷ்கர் இ தொய்பாவின் நிறுவன உறுப்பினரும், சயீத் கூட்டாளியுமான ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவியின் மரணத்தையும் கமிட்டி சரி செய்திருக்கிறது. 2008 மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளை தயார்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய புத்தாவி, கடந்த ஆண்டு மே மாதம் சிறையில் இறந்தான். இவற்றுடன் சொத்து முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நபர்கள் மற்றும் வணிகங்களின் பட்டியலை பாதுகாப்பு கவுன்சில் குழு சமீபத்தில் புதுப்பித்திருகிறது.

Tags: pakistanHafiz Saeed78 years sentenced
Share
Tweet
SendShare
Previous Post

“தி கோட்” படத்தின் ரிலீஸ் தேதி – வெளியான தகவல்!

Next Post

கல்லூரி மாணவிகளுடன் கலந்ரையாடிய அண்ணாமலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies