புத்தொழில் இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பு வாரம் 2024!
Jan 14, 2026, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புத்தொழில் இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பு வாரம் 2024!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஜனவரி 10 முதல் 18 வரை புத்தொழில் இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பு வாரம் 2024-ஐ டிபிஐஐடி ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டின் புத்தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்போர் மற்றும் சம்பந்தப்பட்ட  பிற தரப்பினரை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) இந்திய புத்தொழில் சூழல் மற்றும் தேசிய புத்தொழில் தினத்தை 2024, ஜனவரி 16 அன்று கொண்டாடுகிறது.

இதையொட்டி  2024 ஜனவரி 10 முதல் 18 வரை புத்தொழில் இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பு வாரம் 2024 என்ற ஒரு வார தொடர் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

புதுமைக் கண்டுபிடிப்பு வாரம் 2024-ன் போது, டிபிஐஐடியின் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், 2024 ஜனவரி 11 அன்று குஜராத்தின் காந்திநகரில் நடைபெறும் பத்தாவது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில், புத்தொழில்களின் எல்லையற்ற திறனை விரிவுபடுத்துதல் என்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்துகிறார்.

இந்தக் கருத்தரங்கு வணிகக் கட்டமைப்பு, அறிவுப் பகிர்வு மற்றும் உள்ளடக்கிய சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான உலகளாவிய கொள்கைகளை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2024, ஜனவரி 16, அன்று, தேசிய புத்தொழில் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, டிபிஐஐடி, தேசிய புத்தொழில் விருதுகள் 2023 வழங்கும் நிகழ்ச்சி, மாநிலங்களின் புத்தொழில் தரவரிசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புத்தொழில் வாரத்தின் போது, இந்தியத் தொழில் முனைவோர்,  மாவட்டங்கள் தோறும் உருவாக்கும் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், தொழில் பாதுகாப்பகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சிகளில் புத்தொழில்களுக்கான சிறப்புப் பட்டறைகள், வழிகாட்டுதல் அமர்வுகள், பங்குதாரர் வட்ட மேசைகள், குழு விவாதங்கள் ஆகியவையும் நடைபெறும்.

மேலும், வணிகக் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்வது, வணிகத் திட்டத்தை உருவாக்குவது போன்ற தலைப்புகளில் 5 சிறப்பு வழிகாட்டுதல் அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதற்கும், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும், நாட்டின் புத்தொழில் அமைப்புக்கான முதலீடுகளை அதிகரிப்பதற்கும் ஒரு வலுவான சூழலை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடியால் 2016,  ஜனவரி 16 அன்று ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் 2022-ம் ஆண்டு முதல்  ஜனவரி 16-ம் தேதி தேசிய புத்தொழில் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

2023, அக்டோபர் 31 அன்று பிரதமரால் தொடங்கப்பட்ட எனது இளைய பாரதம் (மை பாரத்) முன்முயற்சியை ஊக்குவிக்க இளைஞர் நலத் துறையுடன் இணைந்து டிபிஐஐடி செலய்படுகிறது.

புத்தொழில் வாரத்தின் போது, இளைஞர்களிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக மை பாரத் முன்முயற்சியின் கீழும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: DPIIT organises Startup India Innovation Week 2024
ShareTweetSendShare
Previous Post

இந்திய வரலாற்றிலேயே வெற்றிகரமான பிரதமர் மோடிதான்: முகேஷ் அம்பானி!

Next Post

பேட்டிங் பயிற்சியை தொடங்கிய தோனி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies