பேட்டிங் பயிற்சியை தொடங்கிய தோனி!
Sep 12, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேட்டிங் பயிற்சியை தொடங்கிய தோனி!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 05:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 17வது ஐபிஎல் தொடருக்கான பேட்டிங் பயிற்சியை தோனி தொடங்கியுள்ளார்.

17வது ஐபிஎல் தொடருக்கான பேட்டிங் பயிற்சியை சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தொடங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்று சிஎஸ்கே அணி அசத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்த பின், 2018, 2021, 2023 என்று ஐபிஎல் தொடரில் ஒற்றை அணியால் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

2020ஆம் ஆண்டு வரை மும்பை அணி சிறப்பாக ஆடி வந்தாலும், அடுத்தடுத்து 3 ஆண்டுகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

இதன் காரணமாகவே மும்பை அணியில் அடுத்த சீசனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உச்சக்கட்டமாக கேப்டனையே மாற்றும் அளவிற்கு மும்பை அணி முடிவுகளை எடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி ஒருமுறை கோப்பை வென்றாலே, மும்பை அணி நிர்வாகம் 2 முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்று மும்முரமாக இருப்பார்கள்.

இதனால் இம்முறை ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அணிகளும் அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.

ஏற்கனவே காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள எம்எஸ் தோனி, எப்போது பயிற்சியை தொடங்குவார் என்று பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ராஞ்சியில் எம்எஸ் தோனி பயிற்சியை தொடங்கியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. புதிய ஹேர்ஸ்டைலில் சிஎஸ்கே பயிற்சி உடையுடன் தோனி காணப்படுகிறார்.

42 வயதாகும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு இந்த ஐபிஎல் சீசனே கடைசி என்று பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு மெகா ஏலம் நடக்க வாய்ப்புள்ளதால், தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கடைசி சீசனிலும் கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கான பயிற்சியை தோனி 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கியுள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாம் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: iplms dhoni cricket
Share
Tweet
SendShare
Previous Post

புத்தொழில் இந்தியா புதுமைக் கண்டுபிடிப்பு வாரம் 2024!

Next Post

புதிய தொழில்நுட்ப வளர்ச்சி சவால்களை சமாளிக்க தயாராக வேண்டும் – ராம்நாத் கோவிந்த்

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies