அகமதாபாத் – அயோத்தி இடையே விமான சேவை தொடக்கம்!
Mar 15, 2026, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகமதாபாத் – அயோத்தி இடையே விமான சேவை தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமான புறப்பட்டு சென்றது.

உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலில் வரும் 22-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம்தான் ஸ்ரீராமரின் குழந்தை சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பு நிகழ்வை தொடங்கி வைக்கிறார். மேலும், விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அமைச்சர் வி.கே. சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சேர்ந்து அகதாபாத் மற்றும் அயோத்தி இடையேயான முதல் மூன்று வார விமான சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் இன்று புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது, “டிசம்பர் 30-ஆம் தேதி அயோத்தி – டெல்லி இடையே முதல் விமானத்தை தொடங்கி வைத்தோம். இன்று அயோத்தி – அகமதாபாத் இடையே விமான சேவையை தொடங்கி உள்ளோம்.

கடந்த 2014-ல் உத்தரப் பிரதேசத்தில் 6 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது அயோத்தி விமான நிலையம் உட்பட 10 விமான நிலையங்கள் உள்ளன. மேலும், 5 விமான நிலையங்கள் அடுத்த ஆண்டுக்குள் உத்தர பிரதேசத்தில் தொடங்க உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெவாரில் சர்வதேச அளவிலான விமான நிலையம் தயாராகிவிடும் என்று கூறினார்.

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “நான்காவது சர்வதேச விமான நிலையத்தை உத்தரபிரதேசத்திற்கு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இதற்கிடையே, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு, அகமதாபாத் – அயோத்தி இடையே முதல் மூன்று வார விமான சேவைகளுக்கான போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: ayodhya ramar temple functionAir service between Ahmedabad and Ayodhya begins!
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் டி20-யில் இருந்து விலகிய விராட் : இது தான் காரணம்!

Next Post

பிரதமர் மோடி நாளை மகாராஷ்டிரா செல்கிறார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies