அகமதாபாத் – அயோத்தி இடையே விமான சேவை தொடக்கம்!
Jul 28, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகமதாபாத் – அயோத்தி இடையே விமான சேவை தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமான புறப்பட்டு சென்றது.

உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலில் வரும் 22-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம்தான் ஸ்ரீராமரின் குழந்தை சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பு நிகழ்வை தொடங்கி வைக்கிறார். மேலும், விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முக்கிய தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய அமைச்சர் வி.கே. சிங், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சேர்ந்து அகதாபாத் மற்றும் அயோத்தி இடையேயான முதல் மூன்று வார விமான சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் இன்று புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது, “டிசம்பர் 30-ஆம் தேதி அயோத்தி – டெல்லி இடையே முதல் விமானத்தை தொடங்கி வைத்தோம். இன்று அயோத்தி – அகமதாபாத் இடையே விமான சேவையை தொடங்கி உள்ளோம்.

கடந்த 2014-ல் உத்தரப் பிரதேசத்தில் 6 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது அயோத்தி விமான நிலையம் உட்பட 10 விமான நிலையங்கள் உள்ளன. மேலும், 5 விமான நிலையங்கள் அடுத்த ஆண்டுக்குள் உத்தர பிரதேசத்தில் தொடங்க உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெவாரில் சர்வதேச அளவிலான விமான நிலையம் தயாராகிவிடும் என்று கூறினார்.

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “நான்காவது சர்வதேச விமான நிலையத்தை உத்தரபிரதேசத்திற்கு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இதற்கிடையே, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு, அகமதாபாத் – அயோத்தி இடையே முதல் மூன்று வார விமான சேவைகளுக்கான போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: ayodhya ramar temple functionAir service between Ahmedabad and Ayodhya begins!
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் டி20-யில் இருந்து விலகிய விராட் : இது தான் காரணம்!

Next Post

பிரதமர் மோடி நாளை மகாராஷ்டிரா செல்கிறார்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies