பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில், கோயம்புத்தூர் – தாம்பரம் இடையே, பொங்கல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க, கோயம்புத்தூர் – தாம்பரம் இடையே, சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, கோயம்புத்தூர் – தாம்பரம் இடையே, பொங்கல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு இரயில் (வண்டி எண் – 06086), வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுமார்க்கமாக, தாம்பரம் – கோயம்புத்தூர் இடையே பொங்கல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு இரயில் (வண்டி எண் – 06085), வரும் 17,18-ஆம் தேதிகளில், காலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதேநாள் மாலை 3.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த சிறப்பு இரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக தாம்பரம் சென்றடையும்.