48-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில், நாளை மாலை தொடங்க உள்ளது.
சென்னையில் ஆண்டுதோறும் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சிறப்பாக நடைபெறும்.
இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும். இதன் காரணமாக, சென்னையில் நடைபெறும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சிக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருவார்கள்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, நாளை மாலை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த 48-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும், பொருட்கள் வாங்கும் கடைகளும், உணவகங்களும் என ஏராளமானவை இடம் பெறவுள்ளன.
நாளையும், நாளை மறுநாளும் பொதுமக்கள் கட்டணமின்றி பொருட்காட்சியைப் பார்வையிடலாம். வருகிற 14-ஆம் தேதி முதல் பெரியவர்களுக்கு 40 ரூபாயும், சிறியோருக்கு 25 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.