மக்களின் முன்னேற்றத்தில்தான் தேசத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்
Jul 26, 2025, 07:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்களின் முன்னேற்றத்தில்தான் தேசத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்

Web Desk by Web Desk
Jan 12, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வஞ்சூர் மற்றும் கீழ் ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் இன்று நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே. சிங் கலந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் வி.கே. சிங்,

நமக்குக் கிடைக்கும் வசதிகளைவிட நமது வருங்கால சந்ததியினருக்கு இன்னும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமென்று பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.

இந்தியாவில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடமில்லை என்றும், நம் நாட்டில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் ஆகியோரின் முன்னேற்றத்தில்தான் தேசத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார். வேலூர் மாவட்டத்திலுள்ள 247 கிராமங்களில் இதுவரை 169 கிராமங்களை இந்த மோடி அரசின் உத்தரவாத வாகனம் சென்றடைந்துள்ளது.

இதன் மூலம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்து கிராமங்களையும் அவரவர் இருக்குமிடங்களுக்கே கொண்டுசெல்கிறது என்றும், விரைவில் எஞ்சியுள்ள கிராமங்களையும் இந்த லட்சிய பயண யாத்திரை வாகனம் சென்றடையும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் பசியுடன் யாரும் இருக்கக் கூடாது  என்பதற்காக பாரதப் பிரதமர் மோடி, பல்வேறு  நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றும், அனைவருக்கும் வீடு, கழிப்பறை, இலவச எரிவாயு, ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். மேலும் சாலையோர ஏழை வியாபரிகளுக்கு எவ்விதப் பிணையுமில்லாமல் 10 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை தொழில்புரிய கடன்கள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் முத்ரா திட்டத்தின் பயனாளிகளில் 60%-க்கும் மேல் பெண்கள் என்றும் இது தொழில்முனைவில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

நம்முடைய பங்களிப்பில்லாமல் நமது நாடு வளர்ச்சியடைந்த நாடாக முடியாது என்றும், நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புடன் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களையும் இந்த லட்சியப் பயண வாகனம் சென்றடைந்து இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது என்றார்.

நாட்டில் ரயில் இணைப்பு, சாலை வசதிகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் விமான நிலையங்கள் அனைத்தும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர், இவையனைத்தும் மோடி அரசின் உத்தரவாதம் என்று தெரிவித்தார்.

பின்னர் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்விளக்கத்தைப் பார்வையிட்டதுடன் கீழ் ஆலத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையின் மேலாளர் ஜி கணேஷ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவலர் ஆர் மிதுன், மாவட்ட முன்னோடி வங்கியின் அலுவலர் ஜமால், நபார்டு வங்கியின் அலுவலர் அருண் விஜய் மற்றும் அஞ்சல் துறையின் அலுவலர் நேதாஜி ஆகியோர் கலந்து கொண்டு அந்தந்த துறைகளைச் சேர்ந்த திட்டங்களின் பயன்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

Tags: VK Singh
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் நீண்ட கடல் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்!

Next Post

களத்தில் இறங்கிய அமெரிக்கா: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சரமாரி தாக்குதல்!

Related News

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies