மக்களின் முன்னேற்றத்தில்தான் தேசத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்
Sep 12, 2026, 10:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் முன்னேற்றத்தில்தான் தேசத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 07:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வஞ்சூர் மற்றும் கீழ் ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் இன்று நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே. சிங் கலந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் வி.கே. சிங்,

நமக்குக் கிடைக்கும் வசதிகளைவிட நமது வருங்கால சந்ததியினருக்கு இன்னும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமென்று பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.

இந்தியாவில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடமில்லை என்றும், நம் நாட்டில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் ஆகியோரின் முன்னேற்றத்தில்தான் தேசத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார். வேலூர் மாவட்டத்திலுள்ள 247 கிராமங்களில் இதுவரை 169 கிராமங்களை இந்த மோடி அரசின் உத்தரவாத வாகனம் சென்றடைந்துள்ளது.

இதன் மூலம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் அனைத்து கிராமங்களையும் அவரவர் இருக்குமிடங்களுக்கே கொண்டுசெல்கிறது என்றும், விரைவில் எஞ்சியுள்ள கிராமங்களையும் இந்த லட்சிய பயண யாத்திரை வாகனம் சென்றடையும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் பசியுடன் யாரும் இருக்கக் கூடாது  என்பதற்காக பாரதப் பிரதமர் மோடி, பல்வேறு  நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றும், அனைவருக்கும் வீடு, கழிப்பறை, இலவச எரிவாயு, ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். மேலும் சாலையோர ஏழை வியாபரிகளுக்கு எவ்விதப் பிணையுமில்லாமல் 10 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை தொழில்புரிய கடன்கள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் முத்ரா திட்டத்தின் பயனாளிகளில் 60%-க்கும் மேல் பெண்கள் என்றும் இது தொழில்முனைவில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

நம்முடைய பங்களிப்பில்லாமல் நமது நாடு வளர்ச்சியடைந்த நாடாக முடியாது என்றும், நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புடன் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களையும் இந்த லட்சியப் பயண வாகனம் சென்றடைந்து இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது என்றார்.

நாட்டில் ரயில் இணைப்பு, சாலை வசதிகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் விமான நிலையங்கள் அனைத்தும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர், இவையனைத்தும் மோடி அரசின் உத்தரவாதம் என்று தெரிவித்தார்.

பின்னர் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்விளக்கத்தைப் பார்வையிட்டதுடன் கீழ் ஆலத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் உணவுப் பாதுகாப்புத் துறையின் மேலாளர் ஜி கணேஷ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவலர் ஆர் மிதுன், மாவட்ட முன்னோடி வங்கியின் அலுவலர் ஜமால், நபார்டு வங்கியின் அலுவலர் அருண் விஜய் மற்றும் அஞ்சல் துறையின் அலுவலர் நேதாஜி ஆகியோர் கலந்து கொண்டு அந்தந்த துறைகளைச் சேர்ந்த திட்டங்களின் பயன்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

Tags: VK Singh
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் நீண்ட கடல் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்!

Next Post

களத்தில் இறங்கிய அமெரிக்கா: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சரமாரி தாக்குதல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies