பொங்கல் பண்டிகை : இன்று முதல் சிறப்பு பேருந்துகள்!
Jan 14, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் பண்டிகை : இன்று முதல் சிறப்பு பேருந்துகள்!

எந்த பேருந்து நிலையத்தில் ஏற வேண்டும் : பயணிகள் குழப்பம்!

Murugesan M by Murugesan M
Jan 12, 2024, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 4,830 சிறப்பு பஸ்கள் 3 நாட்களும் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,830 சிறப்பு பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கப்படவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில்,பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,830 சிறப்பு பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கப்டவுள்ளது. இதேபோல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஆக மொத்தம், 19,484 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானிடோரியத்தில் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் (மெப்ஸ்), வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கத்தில் முன்பதிவு விரைவு பேருந்துகள்:

அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்திருப்போா் மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று (கோயம்பேட்டில் பயணிக்க முன்பதிவு செய்த நேரத்தில்) பயணிக்கலாம்.

அதே நேரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக (விழுப்புரம், திருச்சி மாா்க்கம்) விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழக பேருந்துகளில் (மூன்றுக்கு இரண்டு (3 ல2 இருக்கை கொண்டவை) பயணிக்க முன்பதிவு செய்திருப்போரும், முன்பதிவு செய்யாத பயணிகளும், விழுப்புரம், திருச்சி, மதுரை மாா்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க இருப்போரும் கோயம்பேட்டிலிருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.

தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்பகோணத்துக்குச் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தும், கும்பகோணம் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள் கே.கே.நகா் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

இதேபோல், பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சென்னைக்கு திரும்பி வரவும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. தினசரி இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 4,830 சிறப்பு பஸ்கள் 3 நாட்களும் இயக்கப்படுகின்றன. மொத்தம் 11,130 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், பிற ஊர்களுக்கு இடையே 6,459 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஒரே ஊருக்கு செல்ல முன்பதிவு செய்த பேருந்துகள் ஒரு நிறுத்ததிலும், முன்பதிவு செய்யாத பேருந்துகள் மற்றொரு நிலையத்திலும் நிற்கும் என அறிவாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ரயில் உள்ளிட்ட உரிய போக்குவரத்து இல்லாததால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Tags: Perungalathur.killampakkamkoyambeduPongal special busespongaltransport corporation
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை விதைத்து, மக்களுக்கு ஆன்மீக ஒளியூட்டியவர் சுவாமி விவேகானந்தர்! – அண்ணாமலை

Next Post

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies