சத்தீஸ்கர் டூ அயோத்தி: ஆண்டுதோறும் 20,000 பேருக்கு இலவச இரயில் பயணம்!
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கர் டூ அயோத்தி: ஆண்டுதோறும் 20,000 பேருக்கு இலவச இரயில் பயணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்திக்கு ஆண்டுதோறும் 20,000 பக்தர்கள் இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அம்மாநில பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநில முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், அயோத்தி இராமஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் ஸ்ரீராமர் கோவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இக்கோவிலை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு உறுதி எடுத்திருக்கிறது.

ஆகவே, நாடு முழுவதும் இருந்து அயோத்தி கோவிலுக்கு பத்கர்களை இலவசமாக அழைத்துச் செல்ல பா.ஜ.க. முடிவெடுத்திருக்கிறது. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்திக்கு ஆண்டுதோறும் 20,000 பக்தர்கள் இரயிலில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்தது.

அதன்படி, முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு தரிசனத்துக்குச் செல்ல ஆண்டுதோறும் 20,000 பக்தர்களுக்கு இரயிலில் இலவச பயணம் மேற்கொள்ளும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன்படி, ஆண்டுதோறும் அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்காக 20,000 பக்தர்கள் இரயிலில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்களுக்கான கட்டணச் செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். 18 முதல் 75 வயது வரையுள்ள நல்ல உடல் ஆரோக்கியமுள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். முதல்கட்டமாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைக்கப்படும். அயோத்திக்கு செல்பவர்களை அக்குழுவினர் தேர்வு செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாநில சுற்றுலா வாரியம் மேற்கொள்ளும். இதற்கான நிதி சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கப்படும்.

மேலும், அயோத்திக்கு வாரம்தோறும் சிறப்பு இரயிலை இயக்க இரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. வாரணாசி வழியாக அயோத்திக்கு இரயில் இயக்கப்படும். பக்தர்கள் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசிப்பதுடன் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: cabinet approveChhatttisgarhRam TempleAyodyaFree Rail travel
ShareTweetSendShare
Previous Post

மும்பை : 40 கோடி கொக்கைன் போதைப்பொருளுடன் தாய்லாந்து பெண் கைது!

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 45 டன் லட்டு தயாரிப்பு பணி தீவிரம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies