அமிர்தகாலம் நாட்டு இளைஞர்களுக்கு பொற்காலம்: பிரதமர் மோடி!
Mar 15, 2026, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமிர்தகாலம் நாட்டு இளைஞர்களுக்கு பொற்காலம்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் சாதனைகளுக்குப் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

மும்பையில் கட்டப்பட்டிருக்கும் மிகநீளமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் பாலத்தை திறந்து வைப்பதற்காகவும், நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் தினவிழாவைத் தொடங்கி வைக்கவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருக்கிறார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஹோட்டல் மிர்ச்சி சௌக்கில் இருந்து சுவாமி மஹாராஜ் சௌக் வரை பிரதமர் மோடி காரில் பேரணியாகச் சென்றார். உடன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சென்றனர்.

வழிநெடுகிலும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக மோடியை வரவேற்றனர். மேலும், கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இப்பேரணி சுமார் 35 நிமிடங்கள் வரை நீடித்தது. பின்னர், கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்துக்கு பிரதமர் மோடி சென்றார்.

அங்கு பூஜை செய்து, ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார். பிறகு, மடாதிபதிகளையும் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, பஞ்சவடி பகுதியில் உள்ள காலாராம் கோவிலிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார். பிறகு, நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மகாராஷ்டிரா மாநிலம் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நபர்களுடன் தொடர்புடையது. கடவுள் இராமர் பஞ்சவடி பகுதியில்தான் தங்கியிருந்தார். இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில், வழிபாட்டு தலங்களில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இளைஞர் சக்தி காரணமாக, இந்தியா முதல் 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த சக்திதான் நமது பலம். விரைவில் நாம் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவோம். திறமையான தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியாவை உலகம் பார்க்கிறது. அதோடு, இந்தியாவில் குறைந்த விலையில் இணைய சேவை கிடைப்பது உலக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் தூதர்களாக இந்திய இளைஞர்கள் மாறி இருக்கிறார்கள். உலகின் முதல் 3 ஸ்டார்ட் அப் அமைப்புகளில் இந்தியாவும் உள்ளது. இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது. இந்தியா சாதனை காப்புரிமைகளை தாக்கல் செய்கிறது. இதற்கெல்லாம் பின்னால் நாட்டின் இளைஞர்கள் இருக்கிறார்கள். அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம்.

இன்று ஒவ்வொரு பகுதியிலும் முந்தைய அரசாங்கங்களை விட, 2 மடங்கு வேகத்தில் பணிகள் நடக்கின்றன. மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, இந்தியாவிலும் இதுபோன்ற துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள். தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. மால்கள் முதல் சிறிய கடைகள் வரை யு.பி.ஐ. பயன்படுத்தப்படுவதைப் பார்த்து உலகமே வியக்கிறது” என்றார்.

Tags: pm narendra modiMAHARASHTRAaddressesNashikRashtriya Yuva Mahotsav
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : யஜுர் வேத யாகம் தொடக்கம்!

Next Post

முதலமைச்சரே ஆனாலும் தரையில்தான் அமர வேண்டும் – எங்கு தெரியுமா?

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies