அமிர்தகாலம் நாட்டு இளைஞர்களுக்கு பொற்காலம்: பிரதமர் மோடி!
Jul 1, 2025, 10:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமிர்தகாலம் நாட்டு இளைஞர்களுக்கு பொற்காலம்: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jan 12, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் சாதனைகளுக்குப் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

மும்பையில் கட்டப்பட்டிருக்கும் மிகநீளமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் பாலத்தை திறந்து வைப்பதற்காகவும், நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் தினவிழாவைத் தொடங்கி வைக்கவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருக்கிறார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஹோட்டல் மிர்ச்சி சௌக்கில் இருந்து சுவாமி மஹாராஜ் சௌக் வரை பிரதமர் மோடி காரில் பேரணியாகச் சென்றார். உடன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சென்றனர்.

வழிநெடுகிலும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக மோடியை வரவேற்றனர். மேலும், கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இப்பேரணி சுமார் 35 நிமிடங்கள் வரை நீடித்தது. பின்னர், கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்துக்கு பிரதமர் மோடி சென்றார்.

அங்கு பூஜை செய்து, ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார். பிறகு, மடாதிபதிகளையும் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, பஞ்சவடி பகுதியில் உள்ள காலாராம் கோவிலிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார். பிறகு, நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மகாராஷ்டிரா மாநிலம் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நபர்களுடன் தொடர்புடையது. கடவுள் இராமர் பஞ்சவடி பகுதியில்தான் தங்கியிருந்தார். இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில், வழிபாட்டு தலங்களில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இளைஞர் சக்தி காரணமாக, இந்தியா முதல் 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த சக்திதான் நமது பலம். விரைவில் நாம் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவோம். திறமையான தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியாவை உலகம் பார்க்கிறது. அதோடு, இந்தியாவில் குறைந்த விலையில் இணைய சேவை கிடைப்பது உலக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் தூதர்களாக இந்திய இளைஞர்கள் மாறி இருக்கிறார்கள். உலகின் முதல் 3 ஸ்டார்ட் அப் அமைப்புகளில் இந்தியாவும் உள்ளது. இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது. இந்தியா சாதனை காப்புரிமைகளை தாக்கல் செய்கிறது. இதற்கெல்லாம் பின்னால் நாட்டின் இளைஞர்கள் இருக்கிறார்கள். அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம்.

இன்று ஒவ்வொரு பகுதியிலும் முந்தைய அரசாங்கங்களை விட, 2 மடங்கு வேகத்தில் பணிகள் நடக்கின்றன. மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, இந்தியாவிலும் இதுபோன்ற துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள். தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. மால்கள் முதல் சிறிய கடைகள் வரை யு.பி.ஐ. பயன்படுத்தப்படுவதைப் பார்த்து உலகமே வியக்கிறது” என்றார்.

Tags: Rashtriya Yuva Mahotsavpm narendra modiMAHARASHTRAaddressesNashik
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : யஜுர் வேத யாகம் தொடக்கம்!

Next Post

முதலமைச்சரே ஆனாலும் தரையில்தான் அமர வேண்டும் – எங்கு தெரியுமா?

Related News

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies