அமிர்தகாலம் நாட்டு இளைஞர்களுக்கு பொற்காலம்: பிரதமர் மோடி!
Jan 14, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமிர்தகாலம் நாட்டு இளைஞர்களுக்கு பொற்காலம்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் சாதனைகளுக்குப் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

மும்பையில் கட்டப்பட்டிருக்கும் மிகநீளமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் பாலத்தை திறந்து வைப்பதற்காகவும், நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் தினவிழாவைத் தொடங்கி வைக்கவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருக்கிறார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஹோட்டல் மிர்ச்சி சௌக்கில் இருந்து சுவாமி மஹாராஜ் சௌக் வரை பிரதமர் மோடி காரில் பேரணியாகச் சென்றார். உடன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சென்றனர்.

வழிநெடுகிலும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக மோடியை வரவேற்றனர். மேலும், கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இப்பேரணி சுமார் 35 நிமிடங்கள் வரை நீடித்தது. பின்னர், கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்துக்கு பிரதமர் மோடி சென்றார்.

அங்கு பூஜை செய்து, ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார். பிறகு, மடாதிபதிகளையும் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, பஞ்சவடி பகுதியில் உள்ள காலாராம் கோவிலிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார். பிறகு, நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மகாராஷ்டிரா மாநிலம் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நபர்களுடன் தொடர்புடையது. கடவுள் இராமர் பஞ்சவடி பகுதியில்தான் தங்கியிருந்தார். இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில், வழிபாட்டு தலங்களில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இளைஞர் சக்தி காரணமாக, இந்தியா முதல் 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த சக்திதான் நமது பலம். விரைவில் நாம் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவோம். திறமையான தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியாவை உலகம் பார்க்கிறது. அதோடு, இந்தியாவில் குறைந்த விலையில் இணைய சேவை கிடைப்பது உலக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் தூதர்களாக இந்திய இளைஞர்கள் மாறி இருக்கிறார்கள். உலகின் முதல் 3 ஸ்டார்ட் அப் அமைப்புகளில் இந்தியாவும் உள்ளது. இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது. இந்தியா சாதனை காப்புரிமைகளை தாக்கல் செய்கிறது. இதற்கெல்லாம் பின்னால் நாட்டின் இளைஞர்கள் இருக்கிறார்கள். அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம்.

இன்று ஒவ்வொரு பகுதியிலும் முந்தைய அரசாங்கங்களை விட, 2 மடங்கு வேகத்தில் பணிகள் நடக்கின்றன. மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, இந்தியாவிலும் இதுபோன்ற துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள். தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. மால்கள் முதல் சிறிய கடைகள் வரை யு.பி.ஐ. பயன்படுத்தப்படுவதைப் பார்த்து உலகமே வியக்கிறது” என்றார்.

Tags: addressesNashikRashtriya Yuva Mahotsavpm narendra modiMAHARASHTRA
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : யஜுர் வேத யாகம் தொடக்கம்!

Next Post

முதலமைச்சரே ஆனாலும் தரையில்தான் அமர வேண்டும் – எங்கு தெரியுமா?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies