அமிர்தகாலம் நாட்டு இளைஞர்களுக்கு பொற்காலம்: பிரதமர் மோடி!
Jul 29, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமிர்தகாலம் நாட்டு இளைஞர்களுக்கு பொற்காலம்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் சாதனைகளுக்குப் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

மும்பையில் கட்டப்பட்டிருக்கும் மிகநீளமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் பாலத்தை திறந்து வைப்பதற்காகவும், நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் தினவிழாவைத் தொடங்கி வைக்கவும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருக்கிறார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஹோட்டல் மிர்ச்சி சௌக்கில் இருந்து சுவாமி மஹாராஜ் சௌக் வரை பிரதமர் மோடி காரில் பேரணியாகச் சென்றார். உடன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் சென்றனர்.

வழிநெடுகிலும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக மோடியை வரவேற்றனர். மேலும், கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இப்பேரணி சுமார் 35 நிமிடங்கள் வரை நீடித்தது. பின்னர், கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்துக்கு பிரதமர் மோடி சென்றார்.

அங்கு பூஜை செய்து, ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார். பிறகு, மடாதிபதிகளையும் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, பஞ்சவடி பகுதியில் உள்ள காலாராம் கோவிலிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார். பிறகு, நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மகாராஷ்டிரா மாநிலம் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நபர்களுடன் தொடர்புடையது. கடவுள் இராமர் பஞ்சவடி பகுதியில்தான் தங்கியிருந்தார். இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில், வழிபாட்டு தலங்களில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இளைஞர் சக்தி காரணமாக, இந்தியா முதல் 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த சக்திதான் நமது பலம். விரைவில் நாம் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவோம். திறமையான தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியாவை உலகம் பார்க்கிறது. அதோடு, இந்தியாவில் குறைந்த விலையில் இணைய சேவை கிடைப்பது உலக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் தூதர்களாக இந்திய இளைஞர்கள் மாறி இருக்கிறார்கள். உலகின் முதல் 3 ஸ்டார்ட் அப் அமைப்புகளில் இந்தியாவும் உள்ளது. இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறது. இந்தியா சாதனை காப்புரிமைகளை தாக்கல் செய்கிறது. இதற்கெல்லாம் பின்னால் நாட்டின் இளைஞர்கள் இருக்கிறார்கள். அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம்.

இன்று ஒவ்வொரு பகுதியிலும் முந்தைய அரசாங்கங்களை விட, 2 மடங்கு வேகத்தில் பணிகள் நடக்கின்றன. மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, இந்தியாவிலும் இதுபோன்ற துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள். தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. மால்கள் முதல் சிறிய கடைகள் வரை யு.பி.ஐ. பயன்படுத்தப்படுவதைப் பார்த்து உலகமே வியக்கிறது” என்றார்.

Tags: pm narendra modiMAHARASHTRAaddressesNashikRashtriya Yuva Mahotsav
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : யஜுர் வேத யாகம் தொடக்கம்!

Next Post

முதலமைச்சரே ஆனாலும் தரையில்தான் அமர வேண்டும் – எங்கு தெரியுமா?

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies