ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!
Oct 26, 2025, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!

Web Desk by Web Desk
Jan 12, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏமனின் ஹௌதி அமைப்பினரை குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கின்றன.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதற்கு, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இப்போரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனவே, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பதிலுக்கு, செங்கடலில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா.வும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வந்தன. ஆனால், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை.

இதையடுத்து, அமெரிக்காவும், பிரிட்டனும், ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதலும், கப்பல்படை மூலம் தாக்குதலும் நடத்தி இருக்கின்றன.

ஏமன் நாட்டின் சனா, அல் ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “எங்களது நாட்டவரை தாக்கினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை வெளிப்படுத்த இலக்குகளை குறிவைத்து தாக்கி வருகிறோம்” என்றார்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், “செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கப்படுகிறது. சர்வதேச அமைப்புகளின் தொடர்ச்சியான எச்சரிக்கையை மீறி ஏமன் தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தப்படுகிறது” என்றார்.

அமெரிக்காவும், பிரிட்டனும் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேலுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களும் தாக்கப்படும் என்று ஹௌதி அமைப்பு அதிரடியாக அறிவித்திருக்கிறது.

இதனிடையே, ஏமன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஓமன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலின் நட்பு நாடுகளும், இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: americabritainattackhouthi rebels
ShareTweetSendShare
Previous Post

தேசப்பக்தியில் நாம் ஜெயித்துவிட்ட செய்தியை இந்தியதீவுகள் சொல்லுகின்றன!

Next Post

என்.சி.சி மாணவர்கள் வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்! – ஜெனரல் அனில் சவுகான்

Related News

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies