ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!
Jul 25, 2025, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!

Web Desk by Web Desk
Jan 12, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏமனின் ஹௌதி அமைப்பினரை குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி இருக்கின்றன.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதற்கு, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இப்போரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனவே, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பதிலுக்கு, செங்கடலில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா.வும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வந்தன. ஆனால், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை.

இதையடுத்து, அமெரிக்காவும், பிரிட்டனும், ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதலும், கப்பல்படை மூலம் தாக்குதலும் நடத்தி இருக்கின்றன.

ஏமன் நாட்டின் சனா, அல் ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “எங்களது நாட்டவரை தாக்கினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை வெளிப்படுத்த இலக்குகளை குறிவைத்து தாக்கி வருகிறோம்” என்றார்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், “செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கப்படுகிறது. சர்வதேச அமைப்புகளின் தொடர்ச்சியான எச்சரிக்கையை மீறி ஏமன் தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தப்படுகிறது” என்றார்.

அமெரிக்காவும், பிரிட்டனும் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேலுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களும் தாக்கப்படும் என்று ஹௌதி அமைப்பு அதிரடியாக அறிவித்திருக்கிறது.

இதனிடையே, ஏமன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஓமன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலின் நட்பு நாடுகளும், இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: americabritainattackhouthi rebels
ShareTweetSendShare
Previous Post

தேசப்பக்தியில் நாம் ஜெயித்துவிட்ட செய்தியை இந்தியதீவுகள் சொல்லுகின்றன!

Next Post

என்.சி.சி மாணவர்கள் வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்! – ஜெனரல் அனில் சவுகான்

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies