பொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம்!
Mar 15, 2026, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவம்!

Murugesan M by Murugesan M
Jan 15, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகைம் அனைவரின் பசி தீர்க்க, உணவளிக்கும் உயிரோட்டமுள்ள பண்டிகை எனலாம்.

பொங்கல் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் தைத் திங்கள் முதல் நாள் (சூரியன்) கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் மனிதனை புது முயற்சியில், புதிய நம்பிக்கையில், புதிய திருப்பத்தில் புகுத்தும் நாள் என்று சொல்லலாம்.

இதனை உழவர் திருநாள் என்றும் கூறலாம். ஆடி முதல் மார்கழி வரை கழனியில் ஓயாது உழைத்து விவசாயிகள் சோர்வடைந்து விடுவார்கள். மார்கழியில் அறுவடை காலம் முடிந்து புது நெல் வீடுவந்து சேரும்போது, சோர்வு நீங்கி, மகிழ்ச்சி பொங்கும். ஓய்வு கொள்ளவும், இறைவனை வணங்கி அருள் பெறவும், குடும்பத்துடன் குதூகலமாக இருக்கவும், விவசாய வேலைகள் இல்லாத தை மாதம், முதல் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகையின் ஆன்மீக இரகசியம் என்னவாக இருக்கும் என்று பார்க்கும்போது, முதல் நாள் பழையதை எரித்தல், போகி பண்டிகையாக (தீயதை விலக்கிவிடுதல்) கொண்டாடப்படுகிறது, புதியன புகுத்தல் (நற்பண்புகளை நடைமுறையில் கொண்டு வருதல்), இறைவன் அருள் பெறுதல் என்ற தன்மைகளின் அவசியத்தை உணர்த்துவதாக இருக்கின்றது.

பெரும் பொங்கல் அல்லது சூரிய பொங்கல் எனப்படும் இரண்டாம் தினத்தன்று முதலில் ஞான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவது ஆகும்! அதாவது உழவு செய்ய சூரியன் முழுமையாக உதவுவது போல் (உதாரணத்திற்கு: தேவையற்ற கிருமிகளை அழிப்பது), நமது துக்கங்களுக்கு காரணமாக இருக்கும் அஞ்ஞான இருளை நீக்கி, அதில் நல்ல எண்ணங்கள் விளைய ஞான சூரியனான இறைவன் ஞானத்தை (Knowledge) தருகிறார்,

இதன் மூலம் சுயம் மற்றும் முழு உலகிற்கும் நன்மை ஏற்படுகிறது. அதாவது மகிழ்ச்சி நிறைந்த நிலை உருவாகிறது. அப்படிப்பட்ட இறைவனுக்கு நன்றி சொல்லும் தினமே பொங்கல் ஆகும்.

மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல். உழவுக்கு பெரும் உதவி செய்த மாடுகளை கொண்டாடும் நாள். நாமும் நம்முடைய நலனுக்கு உதவி செய்த அனைத்திற்கும் அன்பு & நன்றி செலுத்தி கொண்டாடி மகிழ்வோம்.

அதற்கு அடுத்த நாள் பெரியவர்களுக்கும், உறவினர்களுக்கும் அன்பையும்,  நன்றியையும் தெரிவிக்கும் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இது மகிழ்ச்சியை பகிர்ந்தளிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. நாமும் நம்முடைய நலனுக்காக உதவிய அனைவருடனும் நம் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம். இதன் மூலம் நம் மனது மிகுந்த லேசாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஏன்னென்றால் கொடுக்கும் மனதில் ஒரு பொழுதும் குறைவிருக்காது

பொங்கல் பண்டிகை திட்டமிட்ட வாழ்க்கை முறையை குறிக்கின்றது. திட்டமிடாத மனம் அனாவசிய சிந்தனைகளில் அலை பாயலாம். ஆதலால் இதனை வெற்றி கொள்ள நல்ல லட்சியங்களைக் கொண்ட வாழ்க்கையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது அவசியம். இதில் ஆத்மீக ஞானமும், தியானமும் உதவியளிக்க முடியும்.

ஆதாலால் இதன் ஆன்மீக இரகசியத்தை புரிந்து நமக்குள் இருக்கும் பழைய  தேவையில்லாத அவகுணங்களை எரித்து, நற்குணங்கள் எனும் ஆடை அணிந்து,  பொங்கல் நல்நாளில் உடலும், ஆத்மாவும், வளம் பெறக் இறைவனை அன்புடன் நினனவு  செய்து கொண்டாடி மகிழ்வோம்.

Tags: Spiritual Significance of Pongal Festivalharvest season iPongal festivalthai pongalponga;
ShareTweetSendShare
Previous Post

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

Next Post

பொங்கல் பண்டிகையும், தாய் வீட்டு சீர்வரிசையும்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies