பாகிஸ்தான் தீவிரவாதியின் முக்கியக் கூட்டாளி ராஜஸ்தானில் கைது!
Oct 28, 2025, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் தீவிரவாதியின் முக்கியக் கூட்டாளி ராஜஸ்தானில் கைது!

Web Desk by Web Desk
Jan 13, 2024, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா, அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்பிரீத் சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியான கைலாஷ் கிச்சான் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் கிச்சான். இவர், பாபர் கால்சா எனப்படும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் சதிச் செயல்களை அரங்கேற்றுவதற்காக, காலிஸ்தான் அமைப்பினருக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வந்தார்.

இவருக்கு எதிராக பஞ்சாப் போலீஸார் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம், ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும், கைலாஷ் கிச்சானுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா, அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹேப்பி பாசியா என்கிற ஹர்பிரீத் சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியாகவும் இருந்து வந்தார். எனவே, அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான், கைலாஷ் கிச்சான் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து பஞ்சாப் மாநில காவல்துறை தலைவர் கௌரவ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங், அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்ப்ரீதி சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியான கைலாஷ் கிச்சான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மத்திய அரசு அமைப்புகளின் உதவியுடன் பஞ்சாப் மாநில காவல்துறையின் சிறப்புப் படை ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் கைது செய்திருக்கிறது. அப்போது, அவரிடமிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 8 தோட்டாக்கள் ஆகியவற்றையும் சிறப்புப் படையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக பாபர் கால்சா தீவிரவாத அமைப்புக்கு கைலாஷ் கிச்சான் ஆயுதங்களை சப்ளை செய்து வந்தது தெரியவந்தருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: ArrestRajastanKhalistan Terrorist
ShareTweetSendShare
Previous Post

பனிச்சரிவு மீட்பு  நடவடிக்கையில் திறனை வெளிப்படுத்திய இந்திய இராணுவம்!

Next Post

ஜனவரி 19-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை!

Related News

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இன்றைய தங்கம் விலை!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies