பாகிஸ்தான் தீவிரவாதியின் முக்கியக் கூட்டாளி ராஜஸ்தானில் கைது!
Mar 15, 2026, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் தீவிரவாதியின் முக்கியக் கூட்டாளி ராஜஸ்தானில் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 13, 2024, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா, அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்பிரீத் சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியான கைலாஷ் கிச்சான் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் கிச்சான். இவர், பாபர் கால்சா எனப்படும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் சதிச் செயல்களை அரங்கேற்றுவதற்காக, காலிஸ்தான் அமைப்பினருக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வந்தார்.

இவருக்கு எதிராக பஞ்சாப் போலீஸார் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போதைப் பொருட்கள் மற்றும் மயக்க மருந்துகள் சட்டம், ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும், கைலாஷ் கிச்சானுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா, அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹேப்பி பாசியா என்கிற ஹர்பிரீத் சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியாகவும் இருந்து வந்தார். எனவே, அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான், கைலாஷ் கிச்சான் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து பஞ்சாப் மாநில காவல்துறை தலைவர் கௌரவ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங், அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்ப்ரீதி சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியான கைலாஷ் கிச்சான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மத்திய அரசு அமைப்புகளின் உதவியுடன் பஞ்சாப் மாநில காவல்துறையின் சிறப்புப் படை ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் கைது செய்திருக்கிறது. அப்போது, அவரிடமிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 8 தோட்டாக்கள் ஆகியவற்றையும் சிறப்புப் படையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக பாபர் கால்சா தீவிரவாத அமைப்புக்கு கைலாஷ் கிச்சான் ஆயுதங்களை சப்ளை செய்து வந்தது தெரியவந்தருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: ArrestRajastanKhalistan Terrorist
ShareTweetSendShare
Previous Post

பனிச்சரிவு மீட்பு  நடவடிக்கையில் திறனை வெளிப்படுத்திய இந்திய இராணுவம்!

Next Post

ஜனவரி 19-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies