ஒரு கோடி பெண்களுக்கு மருந்து தெளிக்க கூடிய ட்ரோன் வழங்க பிரதமர் முடிவு! - மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்
Jul 26, 2025, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு கோடி பெண்களுக்கு மருந்து தெளிக்க கூடிய ட்ரோன் வழங்க பிரதமர் முடிவு! – மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்

Web Desk by Web Desk
Jan 13, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் ஒரு கோடி பெண்களுக்கு விவசாய நிலங்களில் மருந்து தெளிக்க கூடிய ட்ரோன் இயந்திரம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் அருகே அக்ராவரம் என்ற கிராமத்தில் வளர்ச்சி அடைந்த பாரத லட்சியப் பயணம் நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டு மத்திய அரசின் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 50 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் வி.கே. சிங்,

நாட்டில் பெண்கள் விவசாயிகள் இளைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி உள்ளார். வேளாண் பயிர்களுக்கு ட்ரோன் மூலம்  மருந்து தெளிக்கும் இயந்திரம் முதற்கட்டமாக நாட்டில் உள்ள ஒரு கோடி பெண்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

இதற்குக் காரணம் பெண்கள் தங்களுடைய அறிவுத்திறனை பயன்படுத்தி வருமானத்தை பல மடங்காக அதிகரிக்க, இயந்திரங்களை நல்ல முறையில் கையாளுவார்கள். எனவேதான் பெண்கள் பெயரில் இந்த ட்ரோன் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

நாட்டில் யாரும் வறுமையில் வாழக்கூடாது என்பதற்காக குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இனிவரும் ஐந்தாண்டு காலத்திற்கும் இந்த உணவு தானியம் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும். தற்போது நாட்டில் 80 கோடி நபர்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.

வேளாண்மையில் விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டக் கூடிய வகையில் ஆண்டுக்கு 3 முறை 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதால் நாட்டில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் பயன் அடைந்து வருகின்றனர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன திட்டங்கள் நாட்டு மக்களுக்காக கொண்டு வந்துள்ளார் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வளர்ச்சி அடைந்த பாரத லட்சியப் பயணம் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு திட்டங்கள் கிடைக்காத தகுதியான பயனாளிகள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு திட்டப் பலன்களை உடனடியாக பெறலாம்.

ஏழை எளிய மக்களுக்கு  பிரதமர் நரேந்திர மோடி வீட்டு வசதி திட்டத்தில் வழங்கப்படும் வீடுகளில், தமிழகத்திற்கு மட்டும் சுமார் 11 லட்சம் வீடுகள் கட்டி பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

Tags: Union Minister VK Singh
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது! – அண்ணாமலை விமர்சனம்

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 2 மணி நேர சிறப்பு இடைவேளை!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies