மேற்குவங்கத்தில் சாதுக்கள் மீது தாக்குதல்: 12 பேர் கைது!
Aug 18, 2025, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்கத்தில் சாதுக்கள் மீது தாக்குதல்: 12 பேர் கைது!

Web Desk by Web Desk
Jan 13, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க மாநிலம் புருலியாவில் 3 சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டு ரகுநாத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாட்டின் சில இடங்களில் சாதுக்கள், துறவிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் காரில் சென்ற 2 சாதுக்களையும், கார் டிரைவரையும் கிராம மக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்றதொரு சம்பவம் தற்போது மேற்குவங்க மாநிலத்திலும் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 3 சாதுக்கள், மேற்குவங்க மாநிலம் கங்காசாகரில் நடைபெறும் மகர சங்கராந்தி திருவிழாவுக்கு ஒரு வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர். மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் கார் சென்றபோது, அவ்வழியாகச் சென்ற 3 சிறுமிகளிடம் சாதுக்கள் வழிகேட்டிருக்கிறார்கள்.

ஆனால், சாதுக்களைக் கண்டு மிரண்டுபோன சிறுமிகள், பயந்து கூச்சலிட்டபடியே ஊரை நோக்கி ஓடி இருக்கிறார்கள். இதைக் கண்ட உள்ளூர் மக்கள் சுமார் 300 பேர் திரண்டனர். சாதுக்களைப் பார்த்த கிராம மக்கள், இவர்கள் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்று நினைத்து சாதுக்களைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர்.

தகவலறிந்த உள்ளூர் போலீஸார் விரைந்து சென்று, சாதுக்களை மீட்டு காசிப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து புருலியா காவல் கண்காணிப்பாளர் அபிஜித் பானர்ஜி கூறுகையில், “சாதுக்கள் வழி தவறி வந்ததால், சிறுமிகளிடம் வழி கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், அச்சிறுமிகளோ தங்களைக் கடத்த முயற்சிப்பதாகக் கூறி கூச்சலிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாதுக்களை தாக்கி இருக்கிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுகிறது” என்றார்.

இந்த நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக 12 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். எனினும், சாதுக்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசை பா.ஜ.க. கடுமையாக சாடி இருக்கிறது.

இது தொடர்பாக அம்மாநில பா.ஜ.க. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மம்தா பானர்ஜியின் காது கேளாத மவுனம் அவமானகரமானது. இந்து சாதுக்கள் உங்கள் அங்கீகாரத்துக்கு தகுதியற்றவர்களா? இந்த அட்டூழியத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே, புருலியாவில் கும்பலால் தாக்கப்பட்ட சாதுக்களை சந்தித்த பா.ஜ.க. எம்.பி. ஜோதிர்மய் சிங் மஹதோ, இச்சம்பவத்தின் பின்னணியில் ஷேக் அன்வர் என்பவர் இருப்பதாகவும், அவர்தான் சாதுக்களின் காவி உடையைப் பார்த்துவிட்டு, அவர்களை தாக்குவதற்காக கிராம மக்களைக் கூட்டிச் சென்றதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், இச்சம்பவம் மகாராஷ்டிராவின் பால்கரில் நடந்ததைப் போலவே இருக்கிறது. இதுகுறித்து தீர விசாரித்தால் சிலரது பெயர்கள் வெளியே வரக்கூடும். இச்சம்பவம் வேறுவிதமான பிரச்சனைகளை உருவாக்கலாம் என்பதால் முதலில் போலீஸார் மறைத்து விட்டனர் என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

 

A group of #sadhus were #stripped and #assaulted by a mob in West Bengal's #Purulia district on Friday, January 12. A video of the incident is going viral in which the sadhus were seen being thrashed by the mob. #TMC #moblynching #WestBengal #bjp4bengal @WBPolice pic.twitter.com/SpEoD03GVW

— Ravi Pandey🇮🇳 (@ravipandey2643) January 13, 2024

 

Tags: west bengalPuruliagoonsattackedsadhus
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் சாஸ்திரப்படியே நடக்கிறது! – அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர்

Next Post

உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 2.5 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் வழங்கிய ரிஷி சுனக்!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies