மேற்குவங்கத்தில் சாதுக்கள் மீது தாக்குதல்: 12 பேர் கைது!
Jul 29, 2026, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்குவங்கத்தில் சாதுக்கள் மீது தாக்குதல்: 12 பேர் கைது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 13, 2024, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க மாநிலம் புருலியாவில் 3 சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டு ரகுநாத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாட்டின் சில இடங்களில் சாதுக்கள், துறவிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் காரில் சென்ற 2 சாதுக்களையும், கார் டிரைவரையும் கிராம மக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்றதொரு சம்பவம் தற்போது மேற்குவங்க மாநிலத்திலும் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 3 சாதுக்கள், மேற்குவங்க மாநிலம் கங்காசாகரில் நடைபெறும் மகர சங்கராந்தி திருவிழாவுக்கு ஒரு வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர். மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் கார் சென்றபோது, அவ்வழியாகச் சென்ற 3 சிறுமிகளிடம் சாதுக்கள் வழிகேட்டிருக்கிறார்கள்.

ஆனால், சாதுக்களைக் கண்டு மிரண்டுபோன சிறுமிகள், பயந்து கூச்சலிட்டபடியே ஊரை நோக்கி ஓடி இருக்கிறார்கள். இதைக் கண்ட உள்ளூர் மக்கள் சுமார் 300 பேர் திரண்டனர். சாதுக்களைப் பார்த்த கிராம மக்கள், இவர்கள் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்று நினைத்து சாதுக்களைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர்.

தகவலறிந்த உள்ளூர் போலீஸார் விரைந்து சென்று, சாதுக்களை மீட்டு காசிப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து புருலியா காவல் கண்காணிப்பாளர் அபிஜித் பானர்ஜி கூறுகையில், “சாதுக்கள் வழி தவறி வந்ததால், சிறுமிகளிடம் வழி கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், அச்சிறுமிகளோ தங்களைக் கடத்த முயற்சிப்பதாகக் கூறி கூச்சலிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாதுக்களை தாக்கி இருக்கிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுகிறது” என்றார்.

இந்த நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக 12 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். எனினும், சாதுக்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் அரசை பா.ஜ.க. கடுமையாக சாடி இருக்கிறது.

இது தொடர்பாக அம்மாநில பா.ஜ.க. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மம்தா பானர்ஜியின் காது கேளாத மவுனம் அவமானகரமானது. இந்து சாதுக்கள் உங்கள் அங்கீகாரத்துக்கு தகுதியற்றவர்களா? இந்த அட்டூழியத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே, புருலியாவில் கும்பலால் தாக்கப்பட்ட சாதுக்களை சந்தித்த பா.ஜ.க. எம்.பி. ஜோதிர்மய் சிங் மஹதோ, இச்சம்பவத்தின் பின்னணியில் ஷேக் அன்வர் என்பவர் இருப்பதாகவும், அவர்தான் சாதுக்களின் காவி உடையைப் பார்த்துவிட்டு, அவர்களை தாக்குவதற்காக கிராம மக்களைக் கூட்டிச் சென்றதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், இச்சம்பவம் மகாராஷ்டிராவின் பால்கரில் நடந்ததைப் போலவே இருக்கிறது. இதுகுறித்து தீர விசாரித்தால் சிலரது பெயர்கள் வெளியே வரக்கூடும். இச்சம்பவம் வேறுவிதமான பிரச்சனைகளை உருவாக்கலாம் என்பதால் முதலில் போலீஸார் மறைத்து விட்டனர் என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

 

A group of #sadhus were #stripped and #assaulted by a mob in West Bengal's #Purulia district on Friday, January 12. A video of the incident is going viral in which the sadhus were seen being thrashed by the mob. #TMC #moblynching #WestBengal #bjp4bengal @WBPolice pic.twitter.com/SpEoD03GVW

— Ravi Pandey🇮🇳 (@ravipandey2643) January 13, 2024

 

Tags: west bengalPuruliagoonsattackedsadhus
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் சாஸ்திரப்படியே நடக்கிறது! – அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர்

Next Post

உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 2.5 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் வழங்கிய ரிஷி சுனக்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies