ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 30 கோடி பேர் பயன்: மன்சுக் மாண்டவியா!
Oct 26, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 30 கோடி பேர் பயன்: மன்சுக் மாண்டவியா!

Web Desk by Web Desk
Jan 13, 2024, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 30 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்திருப்பதாகவும், இதன் மூலம் இத்திட்டம் புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின்படி, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, பொதுமக்களின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் ஒரே டிஜிட்டல் அட்டையில் சேமித்து வைக்கப்படும்.

மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்கும் நோயாளி, இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டிஜிட்டல் அட்டை மூலம் நோயாளியின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களையும் மருத்துவர் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

இந்த அறிவிப்பின்படி, முதல்கட்டமாக 6 யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தேசிய அளவில் டிஜிட்டல் சுகாதாரத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், இத்திட்டத்தின் மூலம் 30 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “நாடு ஆயுஷ்மானாக மாறுகிறது! 30 கோடிக்கும் அதிகமான மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் இலவச சிகிச்சைக்கான உத்தரவாதத்தைப் பெற்றிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “டிசம்பர் 22-ம் தேதி வரை, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷனின் கீழ், 50 கோடி தனிநபர்கள் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்டை வைத்திருக்கிறார்கள்.

நோயாளிகளின் பதிவுகளுக்கான பாரத் ஹெல்த் அக்கவுண்ட்டை மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வகங்கள் போன்ற சுகாதார நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களும், பிற சுகாதார சேவை வழங்குநர்கள் பயன்படுத்துகின்றனர்.

இன்றுவரை, 33 கோடிக்கும் அதிகமான சுகாதார பதிவுகள், நோயாளிகளின் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: 30 croresMansukh MandaviyaAyushman Bharat
ShareTweetSendShare
Previous Post

அயோத்திக்கு 5 லட்சம் லட்டுக்கள் : மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு! 

Next Post

9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி? – கட்டுக்கதையும் உண்மையான நிலவரமும்!

Related News

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies