ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 30 கோடி பேர் பயன்: மன்சுக் மாண்டவியா!
Jun 14, 2026, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 30 கோடி பேர் பயன்: மன்சுக் மாண்டவியா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 13, 2024, 06:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 30 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்திருப்பதாகவும், இதன் மூலம் இத்திட்டம் புதிய மைல்கல்லை எட்டி இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின்படி, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, பொதுமக்களின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் ஒரே டிஜிட்டல் அட்டையில் சேமித்து வைக்கப்படும்.

மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்கும் நோயாளி, இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டிஜிட்டல் அட்டை மூலம் நோயாளியின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களையும் மருத்துவர் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

இந்த அறிவிப்பின்படி, முதல்கட்டமாக 6 யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தேசிய அளவில் டிஜிட்டல் சுகாதாரத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், இத்திட்டத்தின் மூலம் 30 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “நாடு ஆயுஷ்மானாக மாறுகிறது! 30 கோடிக்கும் அதிகமான மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் இலவச சிகிச்சைக்கான உத்தரவாதத்தைப் பெற்றிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “டிசம்பர் 22-ம் தேதி வரை, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷனின் கீழ், 50 கோடி தனிநபர்கள் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்டை வைத்திருக்கிறார்கள்.

நோயாளிகளின் பதிவுகளுக்கான பாரத் ஹெல்த் அக்கவுண்ட்டை மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆய்வகங்கள் போன்ற சுகாதார நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களும், பிற சுகாதார சேவை வழங்குநர்கள் பயன்படுத்துகின்றனர்.

இன்றுவரை, 33 கோடிக்கும் அதிகமான சுகாதார பதிவுகள், நோயாளிகளின் பாரத் ஹெல்த் அக்கவுண்ட் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: Mansukh MandaviyaAyushman Bharat30 crores
ShareTweetSendShare
Previous Post

அயோத்திக்கு 5 லட்சம் லட்டுக்கள் : மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு! 

Next Post

9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி? – கட்டுக்கதையும் உண்மையான நிலவரமும்!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies