இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் உங்கள் உறுதியான உறுதிப்பாட்டிற்காக, தமிழக பாஜக மற்றும் தமிழக மீனவர்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டதையும், இந்த மீனவர்களின் 3 மீன்பிடி படகுகளும் கைது செய்யப்பட்டதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட்டு, கைதான 13 தமிழக மீனவர்களை விரைவாக தாயகம் திரும்பவும், அவர்களின் மீன்பிடி படகுளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.