ஹௌதி கிளர்ச்சியாளர்கள்: சர்வதேச தீவிரவாதிகளாக அறிவித்த அமெரிக்கா!
Jul 24, 2025, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்கள்: சர்வதேச தீவிரவாதிகளாக அறிவித்த அமெரிக்கா!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்க அறிவித்திருக்கிறது. எனினும், இதனால் எங்கள் நிலைப்பாடு மாறாது. எங்களது தாக்குதல் தொடரும் என்று ஹௌதி தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டில் 1,200 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்நாடு பதிலடித் தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் நடத்தி வரும் முப்படைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகிறார்கள். இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 25,000 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் இப்போரில் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இஸ்ரேலும் பதிலடித் தாக்குதல் கொடுத்து வருகிறது. அதேசமயம்,, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள் உள்ளிட்ட கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எனவே, அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை செங்கடல் பகுதியில் நிலைநிறுத்தி வைத்து, ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை இடைமறித்து தாக்கி அழித்து வருகிறது. எனினும், ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு பயந்து செங்கடல் வழியாகச் செல்லாமல் கப்பல்கள் சுற்றிச் சென்று வருகின்றன.

இதனால், எரிபொருட்களின் செலவு அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இது பல்வேறு நாடுகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.

எனினும், எச்சரிக்கையையும் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்காவும், பிரிட்டனும் ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டன.

ஆனாலும், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. இதையடுத்து, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பை சர்வதேச தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்திருக்கிறது. எனினும், இந்த அறிவிப்பு தங்களின் நிலைப்பாட்டை மாற்றாது எனவும், செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடரும் என்றும் ஹௌதி தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள்.

Tags: OrganizationHouthi terroristinternationalamericaannouncedterrorist
ShareTweetSendShare
Previous Post

இலவசமாக பயிலும் வகையில் ஸ்வயம் இணையதளத்தில் 720 சான்றிதழ் படிப்புகள்! : சென்னை ஐஐடி அறிவிப்பு!

Next Post

“அயோத்தி ராமர் கோவில், என் முன்னோர்களின் கனவு” – நடிகர் அனுபம் கெர்!

Related News

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies