ஹௌதி கிளர்ச்சியாளர்கள்: சர்வதேச தீவிரவாதிகளாக அறிவித்த அமெரிக்கா!
Oct 26, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்கள்: சர்வதேச தீவிரவாதிகளாக அறிவித்த அமெரிக்கா!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்க அறிவித்திருக்கிறது. எனினும், இதனால் எங்கள் நிலைப்பாடு மாறாது. எங்களது தாக்குதல் தொடரும் என்று ஹௌதி தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டில் 1,200 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்நாடு பதிலடித் தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் நடத்தி வரும் முப்படைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகிறார்கள். இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 25,000 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் இப்போரில் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இஸ்ரேலும் பதிலடித் தாக்குதல் கொடுத்து வருகிறது. அதேசமயம்,, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள் உள்ளிட்ட கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எனவே, அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை செங்கடல் பகுதியில் நிலைநிறுத்தி வைத்து, ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை இடைமறித்து தாக்கி அழித்து வருகிறது. எனினும், ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு பயந்து செங்கடல் வழியாகச் செல்லாமல் கப்பல்கள் சுற்றிச் சென்று வருகின்றன.

இதனால், எரிபொருட்களின் செலவு அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இது பல்வேறு நாடுகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.

எனினும், எச்சரிக்கையையும் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்காவும், பிரிட்டனும் ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டன.

ஆனாலும், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. இதையடுத்து, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பை சர்வதேச தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்திருக்கிறது. எனினும், இந்த அறிவிப்பு தங்களின் நிலைப்பாட்டை மாற்றாது எனவும், செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடரும் என்றும் ஹௌதி தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள்.

Tags: americaannouncedterroristOrganizationHouthi terroristinternational
ShareTweetSendShare
Previous Post

இலவசமாக பயிலும் வகையில் ஸ்வயம் இணையதளத்தில் 720 சான்றிதழ் படிப்புகள்! : சென்னை ஐஐடி அறிவிப்பு!

Next Post

“அயோத்தி ராமர் கோவில், என் முன்னோர்களின் கனவு” – நடிகர் அனுபம் கெர்!

Related News

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies