ஹௌதி கிளர்ச்சியாளர்கள்: சர்வதேச தீவிரவாதிகளாக அறிவித்த அமெரிக்கா!
Apr 29, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹௌதி கிளர்ச்சியாளர்கள்: சர்வதேச தீவிரவாதிகளாக அறிவித்த அமெரிக்கா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்க அறிவித்திருக்கிறது. எனினும், இதனால் எங்கள் நிலைப்பாடு மாறாது. எங்களது தாக்குதல் தொடரும் என்று ஹௌதி தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டில் 1,200 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்நாடு பதிலடித் தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் நடத்தி வரும் முப்படைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகிறார்கள். இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 25,000 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் இப்போரில் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இஸ்ரேலும் பதிலடித் தாக்குதல் கொடுத்து வருகிறது. அதேசமயம்,, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள் உள்ளிட்ட கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எனவே, அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை செங்கடல் பகுதியில் நிலைநிறுத்தி வைத்து, ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை இடைமறித்து தாக்கி அழித்து வருகிறது. எனினும், ஹௌதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு பயந்து செங்கடல் வழியாகச் செல்லாமல் கப்பல்கள் சுற்றிச் சென்று வருகின்றன.

இதனால், எரிபொருட்களின் செலவு அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது. இது பல்வேறு நாடுகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.

எனினும், எச்சரிக்கையையும் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்காவும், பிரிட்டனும் ஏமன் நாட்டில் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டன.

ஆனாலும், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. இதையடுத்து, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பை சர்வதேச தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்திருக்கிறது. எனினும், இந்த அறிவிப்பு தங்களின் நிலைப்பாட்டை மாற்றாது எனவும், செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடரும் என்றும் ஹௌதி தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள்.

Tags: internationalamericaannouncedterroristOrganizationHouthi terrorist
ShareTweetSendShare
Previous Post

இலவசமாக பயிலும் வகையில் ஸ்வயம் இணையதளத்தில் 720 சான்றிதழ் படிப்புகள்! : சென்னை ஐஐடி அறிவிப்பு!

Next Post

“அயோத்தி ராமர் கோவில், என் முன்னோர்களின் கனவு” – நடிகர் அனுபம் கெர்!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies