ராமர் வழிபாடு என்று வரும்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பெருமை கொள்வேன்! - உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
Jul 7, 2025, 03:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் வழிபாடு என்று வரும்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பெருமை கொள்வேன்! – உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

Web Desk by Web Desk
Jan 18, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நான் முதலமைச்சராக இல்லாவிட்டாலும், ராமர் கோயில் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்திருப்பேன் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் இயக்கத்தால் தாம் சன்யாசி ஆனதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய அவர், ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை அரசியல் ரீதியாக ஆதாயப்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.

“ஆரம்பத்தில் இருந்தே ராமர் கோயில் இயக்கத்தில் எனக்கு தொடர்பு உண்டு. உண்மையில் ராமர் கோயில் இயக்கத்தால் தான் நான் ‘சன்யாசி’ ஆனேன். இருப்பினும், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு நான் எந்த பெருமையையும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ராமரின் அடியார்களாக அயோத்திக்கு செல்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் அதில் பங்கேற்க மறுத்துவிட்டதாக கூறினார். ராமர் கோயிலுக்கு யாரும் வருவதை தடுக்கவில்லை. ராமரின் அடியார்களாக வருபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் எனக் கூறினார்.

சமாஜ்வாதி மற்றும் பிற கட்சியினரின் குணாதிசயங்கள் மக்களுக்கு தெரியும் என எதிர்க்கட்சிகளை அவர் கிண்டல் செய்தார். “நான் முதலமைச்சராக இல்லாவிட்டாலும், ராமர் கோயில் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்திருப்பேன். ராமர் வழிபாடு என்று வரும்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பெருமை கொள்வேன்” எனக் கூறினார்.

‘இது பெருமை சேர்த்துக் கொள்ளும் தருணம் அல்ல; ராமர் தான் தெய்வீக தந்தை’ எனக் கூறினார். தனது குருவின் பங்களிப்பை நினைவுகூர்ந்தவர், ராமர் கோயில் இயக்கத்தின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்த தனது மதிப்பிற்குரிய குருதேவ் மஹந்த் அவைத்யநாத்ஜியைப் பெற்றது தான் செய்த அதிர்ஷ்டம் என்றார்.

ராமர் கோயில் இயக்கத்தில் கோரக்ஷ்நாத் பீடத்தின் தொடர்பு மற்றும் பங்கு மற்றும் கோயில் இயக்கத்தில் மஹந்த் அவியாத்யநாத்தின் பங்கு பற்றி  பேசிவர், “3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.

76 க்கும் மேற்பட்ட மோதல்கள் கோயில் திருப்பணிக்காக நடந்தன. கோரக்ஷ்நாத் பீடத்திற்கு மக்கள் அடிக்கடி செல்வார்கள். அந்த போராட்டத்தின் பலனாக இன்று கோயில் தலை நிமிர்ந்து நிற்கிறது.” என்று தெரிவித்தார்.

Tags: UP CM Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை பிப்ரவரி வரை நீட்டிப்பு: பிரதமர் மோடி!

Next Post

காஷ்மீராக மாறிய ஊட்டி: சுற்றுலா பயணிகள் அவதி!

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies