விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை பிப்ரவரி வரை நீட்டிப்பு: பிரதமர் மோடி!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை பிப்ரவரி வரை நீட்டிப்பு: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 04:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரைக்கு நாடு முழுவதும் உள்ள மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த யாத்திரை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் இன்று உரையாடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 9 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் முயற்சியாக இருந்தது. அந்த வகையில், கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு மேல் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்படையான மற்றும் திறமையான நிர்வாகத்தை வழங்குவதன் மூலம் வறுமையை தோற்கடிக்க எங்களது அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது.

மேலும், வளர்ச்சியின் நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கும் ஒவ்வொரு குடிமகனையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் சத்தான உணவு, சுகாதாரம் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தர வீடு கிடைக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு இணைப்பு, தண்ணீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டும். அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். மேலும், சுயதொழில் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது முயற்சி.

இதில், ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு வட்டாரமும், ஒவ்வொரு குடும்பமும் சேர்க்கப்பட வேண்டும். இதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். இந்த வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சிந்தனையின் விரிவாக்கம்தான் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா.

இதன் மூலம், மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் மத்திய அரசின் திட்டங்களின் பலன்களை தங்கள் வீட்டு வாசலில் பெறுகிறார்கள். மேலும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவில் ஓடும் வளர்ச்சி ரதம், நம்பிக்கையின் ரதமாக மாறிவிட்டது. அதை தற்போது உத்திரவாதத்தின் ரதம் என்றும் மக்கள் அழைக்கின்றனர்.

ஏனெனில், இதன் மூலம் திட்டங்களின் பலன்களிலிருந்து யாரும் இழக்கப்பட மாட்டார்கள். யாரும் விடப்பட மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. ஆகவே, இந்த யாத்திரையை ஜனவரி 26-ம் தேதியோடு முடித்து விடத் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், இந்த யாத்திரைக்கு நாடு முழுவதும் உள்ள மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த யாத்திரை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படும். இந்த யாத்திரையின் மூலம் அனைத்து திட்டங்களையும் நிறைவு நிலைக்கு கொண்டு செல்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

மேலும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா ஜன் அந்தோலனாக மாறி இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 15 கோடி பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். அதோடு, இந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா மூலம் 70 முதல் 80 சதவீத பஞ்சாயத்துகள் முழுமையான நிலையை எட்டி இருக்கின்றன” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM ModiViksit Bharat Sankalp YatrabeneficiariesInteract
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவிலுக்குப் பயன்படுத்தப்பட்ட கற்களின் சிறப்பு!

Next Post

ராமர் வழிபாடு என்று வரும்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பெருமை கொள்வேன்! – உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies