2030-க்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய விமான சந்தையாக இருக்கும்: மத்திய அமைச்சர்!
Jul 5, 2025, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030-க்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய விமான சந்தையாக இருக்கும்: மத்திய அமைச்சர்!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிக விமானங்களை வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சந்தையாக இந்தியா இருக்கும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் இன்று விங்ஸ் இந்தியா நிகழ்வு தொடங்கி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா கலந்துகொண்டு ஏர் இந்தியாவின் “ஏர்பஸ் A350”-ஐ அறிமுகப்படுத்தி வைத்து பேசுகையில், “2030-க்குள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 200 ஆக உயரும்.

விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இண்டிகோ விமான நிர்வாகம் தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிட்டத்தட்ட 500 விமானங்களை வாங்கி இருக்கிறது.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக விமானங்களை வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் போயிங் மற்றும் ஏர்பஸ் விமான ஆர்டர்கள் அதிகரித்து வருகிறது. இண்டிகோ நிறுனம் 500 விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கி இருக்கிறது.

மேலும், ஏர் இந்தியா 470 விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கி இருக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆகாசா விமான நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கான ஆர்டரை வழங்கி இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகள் போக்குவரத்து 2030-ம் ஆண்டில் இரட்டிப்பாகும். 300 மில்லியனை எட்டும்.

2023-ம் ஆண்டில் விமானப் பயணிகள் போக்குவரத்து 153 மில்லியனாக இருந்தது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து, கோவிட் நோய்க்கு முந்தைய காலத்தில் பதிவு செய்யப்பட்ட உச்சத்தை தாண்டி இருக்கிறது.

கடந்த தசாப்தத்தில் உள்நாட்டு விமானப் பயணிகள் போக்குவரத்து கூட்டு வருடாந்திர வளர்ச்சி 15 சதவீதமாகவும், சர்வதேச அளவில் 6.1 சதவீதமாகவும் வளர்ச்சி கண்டிருக்கிறது. விமான நிலைய உள்கட்டமைப்பில் இந்திய அரசாங்கத்தின் அதிக முதலீடுகள் மற்றும் தேவை அதிகரித்துள்ள நிலையில், விருப்பமான செலவினங்களின் அதிகரிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இன்று இந்தியா உலகின் 3-வது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையாகவும், உலகின் 7-வது பெரிய சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்துச் சந்தையாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச இரண்டையும் இணைத்தால் உலகின் 5வது பெரிய சிவில் விமானச் சந்தையாகவும் இருக்கிறது. இது 2030-ம் ஆண்டு 3-வது இடத்தில் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: HyderabadJyotiraditya ScindiaWings India 2024Civil Aviation minister
ShareTweetSendShare
Previous Post

கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயிகளின் நலனை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை!

Next Post

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : இந்திய வீரர் வெற்றி!

Related News

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு!

போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை!

இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர், மன்னிப்பு கேட்டு வீடியோ!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மண்டப பணியாளர்!

புதுக்கோட்டை : மதுபோதையில் இளைஞர்கள் ரகளை – வீடியோ வைரல்!

விளைநிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சி வெளியானது!

இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

சிறுவன் கடத்தி கொலை : அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விரைவில் போராட்டம் : அதிமுக கவுன்சிலர்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies