2030-க்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய விமான சந்தையாக இருக்கும்: மத்திய அமைச்சர்!
Sep 7, 2026, 12:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030-க்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய விமான சந்தையாக இருக்கும்: மத்திய அமைச்சர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 05:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிக விமானங்களை வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சந்தையாக இந்தியா இருக்கும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் இன்று விங்ஸ் இந்தியா நிகழ்வு தொடங்கி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா கலந்துகொண்டு ஏர் இந்தியாவின் “ஏர்பஸ் A350”-ஐ அறிமுகப்படுத்தி வைத்து பேசுகையில், “2030-க்குள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 200 ஆக உயரும்.

விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இண்டிகோ விமான நிர்வாகம் தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிட்டத்தட்ட 500 விமானங்களை வாங்கி இருக்கிறது.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக விமானங்களை வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் போயிங் மற்றும் ஏர்பஸ் விமான ஆர்டர்கள் அதிகரித்து வருகிறது. இண்டிகோ நிறுனம் 500 விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கி இருக்கிறது.

மேலும், ஏர் இந்தியா 470 விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கி இருக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆகாசா விமான நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கான ஆர்டரை வழங்கி இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகள் போக்குவரத்து 2030-ம் ஆண்டில் இரட்டிப்பாகும். 300 மில்லியனை எட்டும்.

2023-ம் ஆண்டில் விமானப் பயணிகள் போக்குவரத்து 153 மில்லியனாக இருந்தது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து, கோவிட் நோய்க்கு முந்தைய காலத்தில் பதிவு செய்யப்பட்ட உச்சத்தை தாண்டி இருக்கிறது.

கடந்த தசாப்தத்தில் உள்நாட்டு விமானப் பயணிகள் போக்குவரத்து கூட்டு வருடாந்திர வளர்ச்சி 15 சதவீதமாகவும், சர்வதேச அளவில் 6.1 சதவீதமாகவும் வளர்ச்சி கண்டிருக்கிறது. விமான நிலைய உள்கட்டமைப்பில் இந்திய அரசாங்கத்தின் அதிக முதலீடுகள் மற்றும் தேவை அதிகரித்துள்ள நிலையில், விருப்பமான செலவினங்களின் அதிகரிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இன்று இந்தியா உலகின் 3-வது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையாகவும், உலகின் 7-வது பெரிய சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்துச் சந்தையாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச இரண்டையும் இணைத்தால் உலகின் 5வது பெரிய சிவில் விமானச் சந்தையாகவும் இருக்கிறது. இது 2030-ம் ஆண்டு 3-வது இடத்தில் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: HyderabadJyotiraditya ScindiaWings India 2024Civil Aviation minister
Share
Tweet
SendShare
Previous Post

கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயிகளின் நலனை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை!

Next Post

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : இந்திய வீரர் வெற்றி!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies