கொரோனாவை விட கொடிய வைரஸை பரிசோதிக்கும் சீனா!
Oct 25, 2025, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொரோனாவை விட கொடிய வைரஸை பரிசோதிக்கும் சீனா!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொரேனா பாதிப்பில் இருந்து உலகம் மீண்டு வரும் நிலையில், 100 சதவீதம் மனிதர்களைக் கொல்லக்கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை சீனா பரிசோதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, பின் உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது உருமாறி கொண்டே இருப்பது, உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.

கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமிக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது, ஒமிக்ரான் பிஏ.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு, ஜே.என்.1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் கொரோனாவால் உலகில் பெரும்பாலான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. எனினும், சில நாடுகளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை.

இந்நிலையில், 100 சதவீதம் மனிதர்களைக் கொல்லக்கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வு செய்து வருவது தெரிய வந்துள்ளது.

சீன இராணுவத்திடம் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், பாங்கோலின் கொரோனா வைரஸ் (Pangolin Corona Virus) என்று அழைக்கப்படும் புதிய வகை வைரஸை உருவாக்கி உள்ளது.

இந்த புதிய வைரசை எலிகள் சிலவற்றுக்கு கொடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர். இதில், எலிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை அறிவதற்காக ஆய்வு செய்யப்பட்டது.

பாங்கோலின் கொரோனா வைரஸ் எலிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிவதற்காக ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவர்கள் நான்கு எலிகளுக்கு ஒரு டோஸ் ஆக்டிவேட்டட் வைரஸைக் செலுத்தினர். வைரஸ் செலுத்தப்பட்ட எலிகளுடன் 4 ஆரோக்கியமான எலிகளையும் வைத்தனர்.

7-8 நாட்களுக்குள், ஆரோக்கியமான எலிகளும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தன. பாதிக்கப்பட்ட அனைத்து எலிகளும் ஐந்து நாட்களுக்குள் எடை குறைந்ததையும், கண்கள் வெண்மையானதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இந்த வைரஸானது, மனிதர்களிலும் 100 சதவீதம் தீவிர தொற்றும், பாதிப்பும் ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் தற்போதுதான் மீண்டு வந்த நிலையில், அதைவிட கொடிய வைரஸை சீனா பரிசோதித்து வருவது உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது.

Tags: corona death
ShareTweetSendShare
Previous Post

பஹாரி மொழியில் ராம் பஜனைப் பாடலைப் பாடிய காஷ்மீரி பெண்!

Next Post

பிரதமர் மோடியால் இந்தியா மட்டுமல்லாது நட்பு நாடுகளுக்கும் பெரிய பலன்: அமெரிக்கா பாராட்டு!

Related News

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies