கொரோனாவை விட கொடிய வைரஸை பரிசோதிக்கும் சீனா!
Sep 7, 2026, 01:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொரோனாவை விட கொடிய வைரஸை பரிசோதிக்கும் சீனா!

Murugesan M by Murugesan M
Jan 18, 2024, 05:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொரேனா பாதிப்பில் இருந்து உலகம் மீண்டு வரும் நிலையில், 100 சதவீதம் மனிதர்களைக் கொல்லக்கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை சீனா பரிசோதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, பின் உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது உருமாறி கொண்டே இருப்பது, உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.

கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமிக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது, ஒமிக்ரான் பிஏ.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு, ஜே.என்.1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் கொரோனாவால் உலகில் பெரும்பாலான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. எனினும், சில நாடுகளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை.

இந்நிலையில், 100 சதவீதம் மனிதர்களைக் கொல்லக்கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வு செய்து வருவது தெரிய வந்துள்ளது.

சீன இராணுவத்திடம் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், பாங்கோலின் கொரோனா வைரஸ் (Pangolin Corona Virus) என்று அழைக்கப்படும் புதிய வகை வைரஸை உருவாக்கி உள்ளது.

இந்த புதிய வைரசை எலிகள் சிலவற்றுக்கு கொடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர். இதில், எலிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை அறிவதற்காக ஆய்வு செய்யப்பட்டது.

பாங்கோலின் கொரோனா வைரஸ் எலிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிவதற்காக ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவர்கள் நான்கு எலிகளுக்கு ஒரு டோஸ் ஆக்டிவேட்டட் வைரஸைக் செலுத்தினர். வைரஸ் செலுத்தப்பட்ட எலிகளுடன் 4 ஆரோக்கியமான எலிகளையும் வைத்தனர்.

7-8 நாட்களுக்குள், ஆரோக்கியமான எலிகளும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தன. பாதிக்கப்பட்ட அனைத்து எலிகளும் ஐந்து நாட்களுக்குள் எடை குறைந்ததையும், கண்கள் வெண்மையானதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இந்த வைரஸானது, மனிதர்களிலும் 100 சதவீதம் தீவிர தொற்றும், பாதிப்பும் ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் தற்போதுதான் மீண்டு வந்த நிலையில், அதைவிட கொடிய வைரஸை சீனா பரிசோதித்து வருவது உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது.

Tags: corona death
Share
Tweet
SendShare
Previous Post

பஹாரி மொழியில் ராம் பஜனைப் பாடலைப் பாடிய காஷ்மீரி பெண்!

Next Post

பிரதமர் மோடியால் இந்தியா மட்டுமல்லாது நட்பு நாடுகளுக்கும் பெரிய பலன்: அமெரிக்கா பாராட்டு!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies