ஞானவாபி மசூதி வளாகத்தின் சாவி: ஆட்சியரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி வளாகத்தின் சாவி: ஆட்சியரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தின் அடித்தளப் பகுதியின் சாவியை, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் முகலாய அரசர் ஒளரங்கசீப் காலத்தில் விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று கூறி, 1991-ம் ஆண்டில் இந்துக்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மசூதி வளாகத்தில் இருக்கும் சிருங்கார அம்மன் கோவிலில் இந்துக்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டது. மேலும், ஞானவாபி மசூதி வளாகத்தின் அடித்தளப் பகுதி கடந்த 1993-ம் ஆண்டு முதல் பூட்டப்பட்டதோடு, அங்கு இந்துக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்து அமைப்பு சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனுவில், ஞானவாபி வளாகத்தின் அடித்தள பகுதியில் பூசாரி ஒருவர் வழிபாடு நடத்தி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, மசூதி வளாகத்தில் உள்ள சிருங்கார அம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, ஞானவாபி மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், ஆய்வுக்குத் தடை கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மசூதி தரப்பில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, தொல்லியல் துறை ஆய்வு உறுதி செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆய்வறிக்கையை தொல்லியல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். எனினும், ஆய்வறிக்கையை தற்போதைக்கு வெளியிட வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதனால், அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பது தற்போது வரை சஸ்பெண்ஸாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஞானவாபி மசூதிக்குள் இந்துக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், “ஞானவாபி வளாகத்தின் அடித்தள பகுதியை முறையாக பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அந்த பகுதியின் சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: court orderGynanavapi Masjid
ShareTweetSendShare
Previous Post

ஒலிம்பிக் ஹாக்கிப் தகுதி சுற்று : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜெர்மனி !

Next Post

இந்தியாவுக்கான மிகச்சிறந்த தலைவர் மோடி! – அமெரிக்க பாடகி மேரி மில்பென் புகழாரம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies