ஞானவாபி மசூதி வளாகத்தின் சாவி: ஆட்சியரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!
Sep 12, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி வளாகத்தின் சாவி: ஆட்சியரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 12:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தின் அடித்தளப் பகுதியின் சாவியை, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் முகலாய அரசர் ஒளரங்கசீப் காலத்தில் விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று கூறி, 1991-ம் ஆண்டில் இந்துக்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மசூதி வளாகத்தில் இருக்கும் சிருங்கார அம்மன் கோவிலில் இந்துக்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்டது. மேலும், ஞானவாபி மசூதி வளாகத்தின் அடித்தளப் பகுதி கடந்த 1993-ம் ஆண்டு முதல் பூட்டப்பட்டதோடு, அங்கு இந்துக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்து அமைப்பு சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனுவில், ஞானவாபி வளாகத்தின் அடித்தள பகுதியில் பூசாரி ஒருவர் வழிபாடு நடத்தி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, மசூதி வளாகத்தில் உள்ள சிருங்கார அம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, ஞானவாபி மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், ஆய்வுக்குத் தடை கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மசூதி தரப்பில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, தொல்லியல் துறை ஆய்வு உறுதி செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆய்வறிக்கையை தொல்லியல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். எனினும், ஆய்வறிக்கையை தற்போதைக்கு வெளியிட வேண்டாம் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதனால், அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பது தற்போது வரை சஸ்பெண்ஸாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஞானவாபி மசூதிக்குள் இந்துக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், “ஞானவாபி வளாகத்தின் அடித்தள பகுதியை முறையாக பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அந்த பகுதியின் சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: court orderGynanavapi Masjid
Share
Tweet
SendShare
Previous Post

ஒலிம்பிக் ஹாக்கிப் தகுதி சுற்று : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜெர்மனி !

Next Post

இந்தியாவுக்கான மிகச்சிறந்த தலைவர் மோடி! – அமெரிக்க பாடகி மேரி மில்பென் புகழாரம்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies