நீதிமன்றம் அதிரடி: அரசு பங்களாவை காலி செய்த திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா!
Jul 27, 2025, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றம் அதிரடி: அரசு பங்களாவை காலி செய்த திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா!

Web Desk by Web Desk
Jan 19, 2024, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லோக்சபாவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசு பங்களாவை காலி செய்யும்படி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலி செய்தார்.

மேற்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். இவர், அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி மக்களவையில் கேள்வி எழுப்புவதற்காக, மற்றொரு தொழிலதிபரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

இது குறித்து பா.ஜ.க. எம்.பி. நிஷாந்த் துபே நாடாளுமன்றத்தில் புகார் செய்தார். இதையடுத்து, இந்த புகார் குறித்து நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்தது. அப்போது, லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால், அவரை தகுதி நீக்கம் செய்யும்படி ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்தது. ஆகவே, மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, புதுடெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்யும்படி, மஹுவா மொய்த்ராவுக்கு மக்களவை செயலகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அரசு எஸ்டேட் இயக்குநரகமும் கடந்த 7 மற்றும் 12-ம் தேதிகளில் 2 நோட்டீஸ்கள் அனுப்பியது. ஆனாலும், மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலிசெய்யவில்லை.

எனவே, வீட்டைக் காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதும் வீட்டைக் காலி செய்ய மறுத்த மஹுவா மொய்த்ரா, நோட்டீஸை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அரசு வீட்டை காலி செய்ய அவகாசம் கோரினார்.

ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் பிரசாத், மஹுவா மொய்த்ரா கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வீட்டைக் காலி செய்ய வைக்க குழு ஒன்று அவரது வீட்டிற்குச் அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா காலி செய்தார்.

Tags: delhi high courtTMC MP Mahua MoitraRefuses Eviction OrderVacates Govt Bungalow
ShareTweetSendShare
Previous Post

டிச.21-ல் மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு!

Next Post

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய கோவில்களுக்கு சென்று பிரதமர் மோடி பிரார்த்தனை செய்ய உள்ளார்!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies