நீதிமன்றம் அதிரடி: அரசு பங்களாவை காலி செய்த திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா!
Nov 11, 2025, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றம் அதிரடி: அரசு பங்களாவை காலி செய்த திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா!

Web Desk by Web Desk
Jan 19, 2024, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லோக்சபாவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசு பங்களாவை காலி செய்யும்படி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலி செய்தார்.

மேற்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். இவர், அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி மக்களவையில் கேள்வி எழுப்புவதற்காக, மற்றொரு தொழிலதிபரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

இது குறித்து பா.ஜ.க. எம்.பி. நிஷாந்த் துபே நாடாளுமன்றத்தில் புகார் செய்தார். இதையடுத்து, இந்த புகார் குறித்து நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்தது. அப்போது, லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால், அவரை தகுதி நீக்கம் செய்யும்படி ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்தது. ஆகவே, மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, புதுடெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்யும்படி, மஹுவா மொய்த்ராவுக்கு மக்களவை செயலகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அரசு எஸ்டேட் இயக்குநரகமும் கடந்த 7 மற்றும் 12-ம் தேதிகளில் 2 நோட்டீஸ்கள் அனுப்பியது. ஆனாலும், மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலிசெய்யவில்லை.

எனவே, வீட்டைக் காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதும் வீட்டைக் காலி செய்ய மறுத்த மஹுவா மொய்த்ரா, நோட்டீஸை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அரசு வீட்டை காலி செய்ய அவகாசம் கோரினார்.

ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் பிரசாத், மஹுவா மொய்த்ரா கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வீட்டைக் காலி செய்ய வைக்க குழு ஒன்று அவரது வீட்டிற்குச் அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா காலி செய்தார்.

Tags: delhi high courtTMC MP Mahua MoitraRefuses Eviction OrderVacates Govt Bungalow
ShareTweetSendShare
Previous Post

டிச.21-ல் மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு!

Next Post

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய கோவில்களுக்கு சென்று பிரதமர் மோடி பிரார்த்தனை செய்ய உள்ளார்!

Related News

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies