நீதிமன்றம் அதிரடி: அரசு பங்களாவை காலி செய்த திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா!
Apr 30, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றம் அதிரடி: அரசு பங்களாவை காலி செய்த திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லோக்சபாவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசு பங்களாவை காலி செய்யும்படி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலி செய்தார்.

மேற்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். இவர், அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி மக்களவையில் கேள்வி எழுப்புவதற்காக, மற்றொரு தொழிலதிபரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

இது குறித்து பா.ஜ.க. எம்.பி. நிஷாந்த் துபே நாடாளுமன்றத்தில் புகார் செய்தார். இதையடுத்து, இந்த புகார் குறித்து நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்தது. அப்போது, லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால், அவரை தகுதி நீக்கம் செய்யும்படி ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்தது. ஆகவே, மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, புதுடெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்யும்படி, மஹுவா மொய்த்ராவுக்கு மக்களவை செயலகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அரசு எஸ்டேட் இயக்குநரகமும் கடந்த 7 மற்றும் 12-ம் தேதிகளில் 2 நோட்டீஸ்கள் அனுப்பியது. ஆனாலும், மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலிசெய்யவில்லை.

எனவே, வீட்டைக் காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதும் வீட்டைக் காலி செய்ய மறுத்த மஹுவா மொய்த்ரா, நோட்டீஸை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அரசு வீட்டை காலி செய்ய அவகாசம் கோரினார்.

ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் பிரசாத், மஹுவா மொய்த்ரா கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வீட்டைக் காலி செய்ய வைக்க குழு ஒன்று அவரது வீட்டிற்குச் அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா காலி செய்தார்.

Tags: delhi high courtTMC MP Mahua MoitraRefuses Eviction OrderVacates Govt Bungalow
ShareTweetSendShare
Previous Post

டிச.21-ல் மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு!

Next Post

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய கோவில்களுக்கு சென்று பிரதமர் மோடி பிரார்த்தனை செய்ய உள்ளார்!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies