மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!
Jul 24, 2025, 07:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!

Web Desk by Web Desk
Jan 19, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி மற்றும் வாக்காளர் சரிபார்க்கக் கூடிய தாள் தணிக்கைத் தடம் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக, தேசிய அளவில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைக் காண பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்தும், வாக்காளர்கள் சரிபார்க்கக் கூடிய தாள் தணிக்கைத் தடம் குறித்தும் புதிய வாக்களர்களுக்கு தேசிய அளவில் செயல்முறை விளக்கம் அளிக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.

அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தாள் தணிக்கைத் தடம் (VVPAT) பற்றி புதிய வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில், தேசிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டத்தை தலைமைத் தேர்தல் தொடங்கி இருக்கிறது.

அதன்படி, சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களைத் தவிர, மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த வகையில், 613 மாவட்டங்களில் அமைந்திருக்கும் 3,464 சட்டமன்றத் தொகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இதற்காக, மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,500-க்கும் மேற்பட்ட செயல்விளக்க மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதோடு, சுமார் 4,250 மொபைல் வேன்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில், அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், இந்த விழிப்புணர்வுத் திட்டத்தின் வெளிப்பாட்டை மேம்படுத்த, சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள். தவிர, விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான அட்டவணை மாவட்டத் தேர்தல் அதிகாரிகளால் சட்டமன்ற தொகுதி/பிரிவு வாரியாக தயாரிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்த செயல்விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம், தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

பொது விளக்க நிகழ்ச்சிகள் உட்பட பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நோக்கங்களுக்காக EVM-களைப் பயன்படுத்துவதற்கான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறையை ஆணையம் கொண்டிருக்கிறது.

மேலும், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு EVM-களை கையாளுதல் மற்றும் சேமிப்பதற்கான நெறிமுறைகள், டம்மி சின்னங்களுடன் FLC-OK EVM-களை மட்டுமே பயன்படுத்துதல், பயிற்சி மற்றும் விழிப்புணர்வின்போது உருவாக்கப்பட்ட VVPAT சீட்டுகளை அழிப்பது போன்றவை நிலையான இயக்க நடைமுறைகளில் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Election commissionevmprogrammeVVPATBeginsnationwideawareness
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : ஆதார் பூனாவல்லாவுக்கு அழைப்பு!

Related News

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies