மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 03:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி மற்றும் வாக்காளர் சரிபார்க்கக் கூடிய தாள் தணிக்கைத் தடம் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக, தேசிய அளவில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைக் காண பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்தும், வாக்காளர்கள் சரிபார்க்கக் கூடிய தாள் தணிக்கைத் தடம் குறித்தும் புதிய வாக்களர்களுக்கு தேசிய அளவில் செயல்முறை விளக்கம் அளிக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.

அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தாள் தணிக்கைத் தடம் (VVPAT) பற்றி புதிய வாக்காளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில், தேசிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டத்தை தலைமைத் தேர்தல் தொடங்கி இருக்கிறது.

அதன்படி, சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களைத் தவிர, மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த வகையில், 613 மாவட்டங்களில் அமைந்திருக்கும் 3,464 சட்டமன்றத் தொகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இதற்காக, மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3,500-க்கும் மேற்பட்ட செயல்விளக்க மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதோடு, சுமார் 4,250 மொபைல் வேன்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில், அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், இந்த விழிப்புணர்வுத் திட்டத்தின் வெளிப்பாட்டை மேம்படுத்த, சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள். தவிர, விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான அட்டவணை மாவட்டத் தேர்தல் அதிகாரிகளால் சட்டமன்ற தொகுதி/பிரிவு வாரியாக தயாரிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்த செயல்விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம், தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

பொது விளக்க நிகழ்ச்சிகள் உட்பட பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நோக்கங்களுக்காக EVM-களைப் பயன்படுத்துவதற்கான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறையை ஆணையம் கொண்டிருக்கிறது.

மேலும், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு EVM-களை கையாளுதல் மற்றும் சேமிப்பதற்கான நெறிமுறைகள், டம்மி சின்னங்களுடன் FLC-OK EVM-களை மட்டுமே பயன்படுத்துதல், பயிற்சி மற்றும் விழிப்புணர்வின்போது உருவாக்கப்பட்ட VVPAT சீட்டுகளை அழிப்பது போன்றவை நிலையான இயக்க நடைமுறைகளில் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: nationwideawarenessElection commissionevmprogrammeVVPATBegins
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் 355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : ஆதார் பூனாவல்லாவுக்கு அழைப்பு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies