2035-க்குள் பாரதிய விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி!
Mar 15, 2026, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2035-க்குள் பாரதிய விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியின் இந்தியாவின் ஆய்வு நிலையம் அமைக்கப்படும் என்றும், இதற்கான சோதனை பணிகள் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.

ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் சர்வதேச இந்திய அறிவியல் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோமநாத், ‘மாணவர் கண்டுபிடிப்பு விழா – ஸ்பேஸ் ஹேக்கத்தான்’ அமர்வில் உரையாற்றினார்.

அப்போது, விவசாயம் மற்றும் போக்குவரத்து, நீர் ஆதாரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் விண்வெளி தொழில்நுட்பங்களின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். மேலும், ‘புவன்’ போர்ட்டலின் முக்கியத்துவத்தையும், புதுமை மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் சாமானியர்களுக்கான பயன்பாடுகளையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் காணொலி வாயிலாக உரையாடிய சோமநாத், பங்கேற்பாளர்களை விண்வெளி தொழில்நுட்பங்களில் முடிவில்லாத சாத்தியக் கூறுகளை ஆராய ஊக்குவித்தார். மேலும், கிராண்ட் ஃபைனாலில் பங்கேற்பாளர்களுடன் உரையாடி, 30 மணி நேர ஹேக்கத்தானின்போது உருவாக்கப்பட்ட பயன்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டார்.

தொடர்ந்து, விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டவர், சமூக முன்னேற்றம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான இத்தகைய முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அப்போது, 2023-ல் செயல்படுத்தப்பட்ட புதிய இஸ்ரோ கொள்கையிலிருந்து வெளிப்படும் வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மேலும், இஸ்ரோ இனி ஒரு ரகசிய நிறுவனம் அல்ல. மாறாக, சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்று கூறினார். தொடர்ந்து, நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் மற்றும் விஞ்ஞான பாரதி ஆகியவற்றின் குழுக்களுடன் உரையாடியவர், விண்வெளி ஹேக்கத்தானின் வெற்றியில் அவர்களின் முக்கியப் பங்கை ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து, இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிலையத் திட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய சோம்நாத், “வரும் 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு நிலையம் அமைக்கப்படும். இந்த பாரதிய விண்வெளி ஆய்வு நிலையத்துக்கான முதல் சோதனை அடுத்த ஆண்டில் தொடங்கும். இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தின் கட்டமைப்பு தொடா்பாக அண்மையில் ஆய்வு நடத்தினேன்.

இதன் தயாரிப்பு, சோதனைகள் குறித்து தொழில்துறையினருடன் இஸ்ரோ பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. தொடக்கத்தில், மனிதர்கள் யாருமின்றி இந்த விண்வெளி ஆய்வு நிலையம் செயல்படும். அதேபோல, வெள்ளி கிரகத்துக்கான திட்டம் ஏற்கெனவே திட்டமிட்டது. இதற்கான செலவுகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இஸ்ரோவுக்கான முக்கிய இலக்குகளை பிரதமர் நிர்ணயித்திருக்கிறார்.

ஆகவே, இந்த வெள்ளி கிரக ஆய்வுக்கான திட்டம் செலுத்தப்படும் காலத்தை முன்கூட்டியே அறிவிக்க இயலாது. இதுதவிர, அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் வகையில் புதிய ராக்கெட்டை தயாரிக்கும் முயற்சியிலும் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது” என்றார்.

Tags: ISRO ChairmanFaridabadInternational Science Festival 2023
ShareTweetSendShare
Previous Post

‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது?

Next Post

U -19 உலகக்கோப்பை : அபாரமாக ஆடிய தென் ஆப்பிரிக்கா – 285 ரன்கள் குவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies