2035-க்குள் பாரதிய விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி!
Jul 23, 2025, 11:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2035-க்குள் பாரதிய விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி!

Web Desk by Web Desk
Jan 19, 2024, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியின் இந்தியாவின் ஆய்வு நிலையம் அமைக்கப்படும் என்றும், இதற்கான சோதனை பணிகள் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.

ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்தில் சர்வதேச இந்திய அறிவியல் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோமநாத், ‘மாணவர் கண்டுபிடிப்பு விழா – ஸ்பேஸ் ஹேக்கத்தான்’ அமர்வில் உரையாற்றினார்.

அப்போது, விவசாயம் மற்றும் போக்குவரத்து, நீர் ஆதாரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் விண்வெளி தொழில்நுட்பங்களின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். மேலும், ‘புவன்’ போர்ட்டலின் முக்கியத்துவத்தையும், புதுமை மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் சாமானியர்களுக்கான பயன்பாடுகளையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் காணொலி வாயிலாக உரையாடிய சோமநாத், பங்கேற்பாளர்களை விண்வெளி தொழில்நுட்பங்களில் முடிவில்லாத சாத்தியக் கூறுகளை ஆராய ஊக்குவித்தார். மேலும், கிராண்ட் ஃபைனாலில் பங்கேற்பாளர்களுடன் உரையாடி, 30 மணி நேர ஹேக்கத்தானின்போது உருவாக்கப்பட்ட பயன்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டார்.

தொடர்ந்து, விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டவர், சமூக முன்னேற்றம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான இத்தகைய முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அப்போது, 2023-ல் செயல்படுத்தப்பட்ட புதிய இஸ்ரோ கொள்கையிலிருந்து வெளிப்படும் வாய்ப்புகள் குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

மேலும், இஸ்ரோ இனி ஒரு ரகசிய நிறுவனம் அல்ல. மாறாக, சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்று கூறினார். தொடர்ந்து, நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் மற்றும் விஞ்ஞான பாரதி ஆகியவற்றின் குழுக்களுடன் உரையாடியவர், விண்வெளி ஹேக்கத்தானின் வெற்றியில் அவர்களின் முக்கியப் பங்கை ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து, இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிலையத் திட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய சோம்நாத், “வரும் 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு நிலையம் அமைக்கப்படும். இந்த பாரதிய விண்வெளி ஆய்வு நிலையத்துக்கான முதல் சோதனை அடுத்த ஆண்டில் தொடங்கும். இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தின் கட்டமைப்பு தொடா்பாக அண்மையில் ஆய்வு நடத்தினேன்.

இதன் தயாரிப்பு, சோதனைகள் குறித்து தொழில்துறையினருடன் இஸ்ரோ பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. தொடக்கத்தில், மனிதர்கள் யாருமின்றி இந்த விண்வெளி ஆய்வு நிலையம் செயல்படும். அதேபோல, வெள்ளி கிரகத்துக்கான திட்டம் ஏற்கெனவே திட்டமிட்டது. இதற்கான செலவுகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இஸ்ரோவுக்கான முக்கிய இலக்குகளை பிரதமர் நிர்ணயித்திருக்கிறார்.

ஆகவே, இந்த வெள்ளி கிரக ஆய்வுக்கான திட்டம் செலுத்தப்படும் காலத்தை முன்கூட்டியே அறிவிக்க இயலாது. இதுதவிர, அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் வகையில் புதிய ராக்கெட்டை தயாரிக்கும் முயற்சியிலும் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது” என்றார்.

Tags: ISRO ChairmanFaridabadInternational Science Festival 2023
ShareTweetSendShare
Previous Post

‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது?

Next Post

U -19 உலகக்கோப்பை : அபாரமாக ஆடிய தென் ஆப்பிரிக்கா – 285 ரன்கள் குவிப்பு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies