அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பானின் முக்கிய நகரங்கள் நிலைகுலைந்த நிலையில், 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை 7.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.