500 ஆண்டுகளுக்குப் பிறகு இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை!
Sep 9, 2025, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

500 ஆண்டுகளுக்குப் பிறகு இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை!

சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதி!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுமார் 400-500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தி இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கான தருணம் வந்திருக்கிறது. இதற்காக மிகப்பெரிய சண்டைகள் நடந்தன என்று சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதி கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை வரும் 22-ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து நாட்டிலுள்ள வி.வி.ஐ.பி.க்கள் சுமார் 10,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மதத் தலைவர்கள், ஆதீனங்கள், சங்கராச்சாரியார்கள் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அயோத்தி கோவில் வரலாறு என்பது நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டது என்று மதத் தலைவர்கள் பலரும் கூறிவருகின்றனர். மொகலாய அரசர் பாபர் காலத்தில் அயோத்தியில் இருந்து இராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும், இக்கோவிலை மீட்பதற்காக 500 ஆண்டுகளாக இந்துக்கள் போராடி வந்ததையும், இப்போராட்டங்களில் லட்சக்கணக்கானோர் உயிர் நீத்ததையும் விவரித்து வருகின்றனர். அந்த வகையில், சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதியும் இராமர் கோவில் வரலாறு குறித்து விவரித்திருக்கிறார்.

இதுகுறித்து சுவாமி சதானந்த சரஸ்வதி கூறுகையில், “சுமார் 400 முதல் 500 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் இராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டா விழாவுக்கான தருணம் வந்திருக்கிறது. இது சாதாரணமாக நடந்து விடவில்லை.

தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகே இது நடக்கிறது. இதற்காக மிகப்பெரிய சண்டைகள் நடந்தன. போர்கள் நடந்தன. படையெடுப்பாளர்கள் எங்கள் மதத்தைத் தாக்கி எங்கள் மதத்தை நாசமாக்கினார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: AyodyaPran Pratishtha ceremonyShankaracharyaCame after 500 yearsswami sadanand saraswati
ShareTweetSendShare
Previous Post

ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது!

Next Post

U -19 உலகக்கோப்பை : இந்தியா பேட்டிங்!

Related News

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies