500 ஆண்டுகளுக்குப் பிறகு இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை!
Apr 29, 2026, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

500 ஆண்டுகளுக்குப் பிறகு இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை!

சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுமார் 400-500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தி இராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கான தருணம் வந்திருக்கிறது. இதற்காக மிகப்பெரிய சண்டைகள் நடந்தன என்று சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதி கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை வரும் 22-ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து நாட்டிலுள்ள வி.வி.ஐ.பி.க்கள் சுமார் 10,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மதத் தலைவர்கள், ஆதீனங்கள், சங்கராச்சாரியார்கள் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அயோத்தி கோவில் வரலாறு என்பது நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டது என்று மதத் தலைவர்கள் பலரும் கூறிவருகின்றனர். மொகலாய அரசர் பாபர் காலத்தில் அயோத்தியில் இருந்து இராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும், இக்கோவிலை மீட்பதற்காக 500 ஆண்டுகளாக இந்துக்கள் போராடி வந்ததையும், இப்போராட்டங்களில் லட்சக்கணக்கானோர் உயிர் நீத்ததையும் விவரித்து வருகின்றனர். அந்த வகையில், சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதியும் இராமர் கோவில் வரலாறு குறித்து விவரித்திருக்கிறார்.

இதுகுறித்து சுவாமி சதானந்த சரஸ்வதி கூறுகையில், “சுமார் 400 முதல் 500 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் இராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டா விழாவுக்கான தருணம் வந்திருக்கிறது. இது சாதாரணமாக நடந்து விடவில்லை.

தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகே இது நடக்கிறது. இதற்காக மிகப்பெரிய சண்டைகள் நடந்தன. போர்கள் நடந்தன. படையெடுப்பாளர்கள் எங்கள் மதத்தைத் தாக்கி எங்கள் மதத்தை நாசமாக்கினார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Pran Pratishtha ceremonyShankaracharyaCame after 500 yearsswami sadanand saraswatiAyodya
ShareTweetSendShare
Previous Post

ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது!

Next Post

U -19 உலகக்கோப்பை : இந்தியா பேட்டிங்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies