அயோத்தியில் 24 மணி நேர சுகாதார வசதிகள்: தகவல், ஒளிபரப்பு செயலாளர்!
Jul 26, 2025, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் 24 மணி நேர சுகாதார வசதிகள்: தகவல், ஒளிபரப்பு செயலாளர்!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு, அயோத்தியில் 24 மணி நேர சுகாதார வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், செய்தியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில், தனியாக ஊடக மையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புச் செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், புதிதாக 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் பிரான் பிரதிஷ்டை ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, அயோத்தியில் மருத்துவத் தயார் நிலையை மேம்படுத்தும் நோக்கில் கணிசமான முயற்சிகளை சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதேபோல, உத்தரப் பிரதேச அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தற்போதுள்ள மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது.

அதன்படி, மேளா பகுதியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவுதல், 16 முதலுதவிச் சாவடிகள் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் துளசி உத்யானில் 20 படுக்கைகள், டென்ட் சிட்டியில் 10 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன் கூடிய 2 தற்காலிக கள மருத்துவமனைகள் நிறுவுதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

இந்த நிலையில், அயோத்தியில் உள்ள ஊடக ஏற்பாடுகள் மற்றும் சுகாதார வசதிகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வ சந்திரா ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அபூர்வ சந்திரா, “ஊடகவியலாளர்களுக்கு அனைத்து வகையான வசதிகளும் கிடைக்கும் வகையில், நகரில் ஒரு ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் அயோத்திக்கு வந்து இந்த மாபெரும் நிகழ்வை ஒளிபரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, மருத்துவ வசதிகள் 24 மணி நேரமும் இருக்கும்” என்றார்.

ஏர் வைஸ் மார்ஷல் தன்மோய் ராய் கூறுகையில், “ஆரோக்ய மைத்ரீ திட்டத்தின் கீழ், அயோத்தியில் பீஷ்ம் ட்ரௌமா சென்டர் நிறுவப்பட்டிருக்கிறது. இது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் குறைந்தது 200 பேருக்கு சுகாதார வசதியை வழங்கும்” என்றார்.

அயோத்தியில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகள் குறித்து ஏற்கெனவே மத்திய சுகாதாரச் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் ஆகியோர் சமீபத்தில் ஆய்வு செய்து, மருத்துவ உள்கட்டமைப்பை பலப்படுத்தினர்.

இது தவிர, ராஜர்ஷி தஷ்ரத் ராஜ்கியா மருத்துவக் கல்லூரியை 350-ல் இருந்து 550 படுக்கைகளாக விரிவுபடுத்துவதற்கு மத்திய ஆதரவு அனுமதி அளித்தது. இதை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைத்தார்.

கூடுதலாக, புதுடெல்லியில் உள்ள AIIMS-ல் உள்ள JPNA ட்ராமா சென்டரில் இருந்து ஒரு குழு வரவழைக்கப்பட்டு, அயோத்தியில் பணியமர்த்தப்பட்டுள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும், அடிப்படை வாழ்க்கை ஆதரவு, இதய நுரையீரல் புத்துயிர் CPR, டிரேஜ் நுட்பங்கள், அவசரநிலை மற்றும் ட்ராமா கேர் ஆகியவற்றில் திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: I&B SecretaryreviewsayodhyaPran Pratishtha'
ShareTweetSendShare
Previous Post

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோயிலில் ஆய்வு!

Next Post

சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies