அயோத்தியில் 24 மணி நேர சுகாதார வசதிகள்: தகவல், ஒளிபரப்பு செயலாளர்!
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் 24 மணி நேர சுகாதார வசதிகள்: தகவல், ஒளிபரப்பு செயலாளர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 05:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு, அயோத்தியில் 24 மணி நேர சுகாதார வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், செய்தியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில், தனியாக ஊடக மையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புச் செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், புதிதாக 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் பிரான் பிரதிஷ்டை ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, அயோத்தியில் மருத்துவத் தயார் நிலையை மேம்படுத்தும் நோக்கில் கணிசமான முயற்சிகளை சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதேபோல, உத்தரப் பிரதேச அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தற்போதுள்ள மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது.

அதன்படி, மேளா பகுதியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவுதல், 16 முதலுதவிச் சாவடிகள் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் துளசி உத்யானில் 20 படுக்கைகள், டென்ட் சிட்டியில் 10 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன் கூடிய 2 தற்காலிக கள மருத்துவமனைகள் நிறுவுதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

இந்த நிலையில், அயோத்தியில் உள்ள ஊடக ஏற்பாடுகள் மற்றும் சுகாதார வசதிகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வ சந்திரா ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அபூர்வ சந்திரா, “ஊடகவியலாளர்களுக்கு அனைத்து வகையான வசதிகளும் கிடைக்கும் வகையில், நகரில் ஒரு ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் அயோத்திக்கு வந்து இந்த மாபெரும் நிகழ்வை ஒளிபரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, மருத்துவ வசதிகள் 24 மணி நேரமும் இருக்கும்” என்றார்.

ஏர் வைஸ் மார்ஷல் தன்மோய் ராய் கூறுகையில், “ஆரோக்ய மைத்ரீ திட்டத்தின் கீழ், அயோத்தியில் பீஷ்ம் ட்ரௌமா சென்டர் நிறுவப்பட்டிருக்கிறது. இது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் குறைந்தது 200 பேருக்கு சுகாதார வசதியை வழங்கும்” என்றார்.

அயோத்தியில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகள் குறித்து ஏற்கெனவே மத்திய சுகாதாரச் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் ஆகியோர் சமீபத்தில் ஆய்வு செய்து, மருத்துவ உள்கட்டமைப்பை பலப்படுத்தினர்.

இது தவிர, ராஜர்ஷி தஷ்ரத் ராஜ்கியா மருத்துவக் கல்லூரியை 350-ல் இருந்து 550 படுக்கைகளாக விரிவுபடுத்துவதற்கு மத்திய ஆதரவு அனுமதி அளித்தது. இதை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைத்தார்.

கூடுதலாக, புதுடெல்லியில் உள்ள AIIMS-ல் உள்ள JPNA ட்ராமா சென்டரில் இருந்து ஒரு குழு வரவழைக்கப்பட்டு, அயோத்தியில் பணியமர்த்தப்பட்டுள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும், அடிப்படை வாழ்க்கை ஆதரவு, இதய நுரையீரல் புத்துயிர் CPR, டிரேஜ் நுட்பங்கள், அவசரநிலை மற்றும் ட்ராமா கேர் ஆகியவற்றில் திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ayodhyaPran Pratishtha'I&B Secretaryreviews
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோயிலில் ஆய்வு!

Next Post

சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies