அயோத்தியில் 24 மணி நேர சுகாதார வசதிகள்: தகவல், ஒளிபரப்பு செயலாளர்!
Jul 29, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் 24 மணி நேர சுகாதார வசதிகள்: தகவல், ஒளிபரப்பு செயலாளர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு, அயோத்தியில் 24 மணி நேர சுகாதார வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், செய்தியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில், தனியாக ஊடக மையம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புச் செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், புதிதாக 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் பிரான் பிரதிஷ்டை ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, அயோத்தியில் மருத்துவத் தயார் நிலையை மேம்படுத்தும் நோக்கில் கணிசமான முயற்சிகளை சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதேபோல, உத்தரப் பிரதேச அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தற்போதுள்ள மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது.

அதன்படி, மேளா பகுதியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவுதல், 16 முதலுதவிச் சாவடிகள் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் துளசி உத்யானில் 20 படுக்கைகள், டென்ட் சிட்டியில் 10 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன் கூடிய 2 தற்காலிக கள மருத்துவமனைகள் நிறுவுதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

இந்த நிலையில், அயோத்தியில் உள்ள ஊடக ஏற்பாடுகள் மற்றும் சுகாதார வசதிகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வ சந்திரா ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அபூர்வ சந்திரா, “ஊடகவியலாளர்களுக்கு அனைத்து வகையான வசதிகளும் கிடைக்கும் வகையில், நகரில் ஒரு ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் அயோத்திக்கு வந்து இந்த மாபெரும் நிகழ்வை ஒளிபரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, மருத்துவ வசதிகள் 24 மணி நேரமும் இருக்கும்” என்றார்.

ஏர் வைஸ் மார்ஷல் தன்மோய் ராய் கூறுகையில், “ஆரோக்ய மைத்ரீ திட்டத்தின் கீழ், அயோத்தியில் பீஷ்ம் ட்ரௌமா சென்டர் நிறுவப்பட்டிருக்கிறது. இது ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் குறைந்தது 200 பேருக்கு சுகாதார வசதியை வழங்கும்” என்றார்.

அயோத்தியில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகள் குறித்து ஏற்கெனவே மத்திய சுகாதாரச் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் ஆகியோர் சமீபத்தில் ஆய்வு செய்து, மருத்துவ உள்கட்டமைப்பை பலப்படுத்தினர்.

இது தவிர, ராஜர்ஷி தஷ்ரத் ராஜ்கியா மருத்துவக் கல்லூரியை 350-ல் இருந்து 550 படுக்கைகளாக விரிவுபடுத்துவதற்கு மத்திய ஆதரவு அனுமதி அளித்தது. இதை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைத்தார்.

கூடுதலாக, புதுடெல்லியில் உள்ள AIIMS-ல் உள்ள JPNA ட்ராமா சென்டரில் இருந்து ஒரு குழு வரவழைக்கப்பட்டு, அயோத்தியில் பணியமர்த்தப்பட்டுள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும், அடிப்படை வாழ்க்கை ஆதரவு, இதய நுரையீரல் புத்துயிர் CPR, டிரேஜ் நுட்பங்கள், அவசரநிலை மற்றும் ட்ராமா கேர் ஆகியவற்றில் திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ayodhyaPran Pratishtha'I&B Secretaryreviews
ShareTweetSendShare
Previous Post

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோயிலில் ஆய்வு!

Next Post

சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies