"அம்ரித் உத்யன்" பிப்ரவரி 2 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு!
Sep 27, 2025, 11:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அம்ரித் உத்யன்” பிப்ரவரி 2 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள “அம்ரித் உத்யன்” எனப்படும் தோட்டங்கள், பிப்ரவரி 2-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டது. அதற்கு முன்பாக, அவை ‘முகல்’ (முகலாய) தோட்டங்கள் என்று அழைக்கப்பட்டன.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டங்கள், பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் ‘உத்யன் உத்சவ் 2024’ நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் 2 முதல் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 2-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றுத் தோட்டங்களைத் திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “உத்யன் உத்சவ் I-2024” திட்டத்தின் கீழ் ராஷ்டிரபதி பவனின் “அம்ரித் உத்யன்” பிப்ரவரி 2 முதல் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். மக்கள் திங்கட்கிழமைகள் தவிர வாரத்தில் 6 நாட்களும் உத்யனை பார்வையிடலாம்.

அதேசமயம், அம்ரித் உத்யன் குறிப்பிட்ட தேதிகளில் சிறப்புப் பிரிவினருக்காக மட்டுமே திறக்கப்படும். பிப்ரவரி 22-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும், 23-ம் தேதி பாதுகாப்பு, துணை இராணுவம் மற்றும் போலீஸ் படைகளுக்கும், மார்ச் 1-ம் தேதி பெண்கள் மற்றும் பழங்குடியின பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கும், 5-ம் தேதி அனாதை இல்ல குழந்தைகளுக்கும் நடத்தப்படும்.

பார்வையாளர்கள் 6 மணி நேர இடைவெளிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்கள் https://visit.rashtrapatibhavan.gov.in/visit/amrit-udyan/rE-ல் முன்பதிவு செய்யலாம். வாக் இன் பார்வையாளர்கள், ராஷ்டிரபதி பவனின் கேட் எண்.12-க்கு அருகில் உள்ள கவுண்டர்கள் அல்லது சுய சேவை கியோஸ்கில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அனைத்து பார்வையாளர்களுக்கும் நுழைவு மற்றும் வெளியேறுதல் வழியாக குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டத்தின் கேட் எண்.35 இருக்கும். அதேபோல, பார்வையாளர்களின் வசதிக்காக, மத்திய செயலக மெட்ரோ நிலையத்திலிருந்து கேட் எண்.35-க்கு ஷெட்டில் பேருந்து சேவை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இயக்கப்படும்.

சுற்றுப் பயணத்தின்போது, ​​பார்வையாளர்கள் போன்சாய் தோட்டம், இசை நீரூற்று, மத்திய புல்வெளி, நீண்ட தோட்டம் மற்றும் வட்டத் தோட்டம் வழியாகச் செல்வார்கள். வெளியேறும் இடத்தில் அவர்களுக்கான உணவு விடுதிகள் இருக்கும்.

பார்வையாளர்கள் மொபைல் போன்கள், எலெக்ட்ரானிக் சாவிகள், பர்ஸ்/கைப்பைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். பொதுப் பாதையில் பல்வேறு இடங்களில் குடிநீர், கழிவறை, முதலுதவி அல்லது மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பல்வேறு தோட்டங்கள் உள்ளன. ஏற்கெனவே, கிழக்குப் புல்வெளி, மத்திய புல்வெளி, நீண்ட தோட்டம் மற்றும் வட்ட தோட்டம் ஆகியவை இருந்தன. அதன் பிறகு, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோரது பதவிக் காலங்களில், மூலிகை-I, மூலிகை-II, தொட்டுணரக்கூடிய தோட்டம், போன்சாய் தோட்டம் மற்றும் ஆரோக்கிய வனம் என பல தோட்டங்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Amrit Udyanopen publicFebruary 2
ShareTweetSendShare
Previous Post

ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும்!

Next Post

என்.சி.சி.யில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் உங்களுக்கு உதவும்! – ராஜ்நாத் சிங்

Related News

வங்கிக்கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளர் – ஆள் வைத்து தாக்கிய மேலாளருக்கு போலீஸ் வலை வீச்சு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா – முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

அண்ணா, எம்ஜிஆர் குறித்து அவதூறு – சீமானுக்கு அதிமுக கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய கோப்பை டி/20 கிரிக்கெட் தொடர் – இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை – உயர் நீதிமன்றம்

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

சென்னை ஆழ்வார்பேட்டை உணவகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

லடாக் வன்முறை பின்னணியில் சோனம் வாங்சுக் : ஆத்திரமூட்டும் பேச்சுகள் எதற்காக?

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies