"அம்ரித் உத்யன்" பிப்ரவரி 2 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு!
Mar 15, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அம்ரித் உத்யன்” பிப்ரவரி 2 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள “அம்ரித் உத்யன்” எனப்படும் தோட்டங்கள், பிப்ரவரி 2-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என்று பொதுவான பெயர் சூட்டப்பட்டது. அதற்கு முன்பாக, அவை ‘முகல்’ (முகலாய) தோட்டங்கள் என்று அழைக்கப்பட்டன.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டங்கள், பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் ‘உத்யன் உத்சவ் 2024’ நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் 2 முதல் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 2-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றுத் தோட்டங்களைத் திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “உத்யன் உத்சவ் I-2024” திட்டத்தின் கீழ் ராஷ்டிரபதி பவனின் “அம்ரித் உத்யன்” பிப்ரவரி 2 முதல் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். மக்கள் திங்கட்கிழமைகள் தவிர வாரத்தில் 6 நாட்களும் உத்யனை பார்வையிடலாம்.

அதேசமயம், அம்ரித் உத்யன் குறிப்பிட்ட தேதிகளில் சிறப்புப் பிரிவினருக்காக மட்டுமே திறக்கப்படும். பிப்ரவரி 22-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும், 23-ம் தேதி பாதுகாப்பு, துணை இராணுவம் மற்றும் போலீஸ் படைகளுக்கும், மார்ச் 1-ம் தேதி பெண்கள் மற்றும் பழங்குடியின பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கும், 5-ம் தேதி அனாதை இல்ல குழந்தைகளுக்கும் நடத்தப்படும்.

பார்வையாளர்கள் 6 மணி நேர இடைவெளிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்கள் https://visit.rashtrapatibhavan.gov.in/visit/amrit-udyan/rE-ல் முன்பதிவு செய்யலாம். வாக் இன் பார்வையாளர்கள், ராஷ்டிரபதி பவனின் கேட் எண்.12-க்கு அருகில் உள்ள கவுண்டர்கள் அல்லது சுய சேவை கியோஸ்கில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அனைத்து பார்வையாளர்களுக்கும் நுழைவு மற்றும் வெளியேறுதல் வழியாக குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டத்தின் கேட் எண்.35 இருக்கும். அதேபோல, பார்வையாளர்களின் வசதிக்காக, மத்திய செயலக மெட்ரோ நிலையத்திலிருந்து கேட் எண்.35-க்கு ஷெட்டில் பேருந்து சேவை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இயக்கப்படும்.

சுற்றுப் பயணத்தின்போது, ​​பார்வையாளர்கள் போன்சாய் தோட்டம், இசை நீரூற்று, மத்திய புல்வெளி, நீண்ட தோட்டம் மற்றும் வட்டத் தோட்டம் வழியாகச் செல்வார்கள். வெளியேறும் இடத்தில் அவர்களுக்கான உணவு விடுதிகள் இருக்கும்.

பார்வையாளர்கள் மொபைல் போன்கள், எலெக்ட்ரானிக் சாவிகள், பர்ஸ்/கைப்பைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம். பொதுப் பாதையில் பல்வேறு இடங்களில் குடிநீர், கழிவறை, முதலுதவி அல்லது மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பல்வேறு தோட்டங்கள் உள்ளன. ஏற்கெனவே, கிழக்குப் புல்வெளி, மத்திய புல்வெளி, நீண்ட தோட்டம் மற்றும் வட்ட தோட்டம் ஆகியவை இருந்தன. அதன் பிறகு, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோரது பதவிக் காலங்களில், மூலிகை-I, மூலிகை-II, தொட்டுணரக்கூடிய தோட்டம், போன்சாய் தோட்டம் மற்றும் ஆரோக்கிய வனம் என பல தோட்டங்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Amrit Udyanopen publicFebruary 2
ShareTweetSendShare
Previous Post

ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும்!

Next Post

என்.சி.சி.யில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் உங்களுக்கு உதவும்! – ராஜ்நாத் சிங்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies