நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு தனது மாமியாரை பிரதமர் மோடியை சந்திக்க வைத்து அவரது கனவை நனவாக்கி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று முன்தினம் சென்னை வந்த அவர் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு நேற்று அவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
3வது நாளான இன்று பிரதமர் மோடி ராமர் பாலம் இருந்ததாக கூறப்படும் அரிச்சல் முனைக்கு சென்றார். அதன்பிறகு தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
இந்நிலையில் தான் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை பாஜக நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சுந்தர்.சி யின் தாயாரும் நடிகை குஷ்பூ வின் மாமியாருமான 92 வயது நிரம்பிய தெய்வானை அம்மாள் பாரத பிரதமர் மோடிக்கு குங்குமம் இட்டு ஆசி வழங்கினார்.