இந்தியா வந்தடைந்தார் ஐ.நா. பொதுச் சபைத் தலைவர்!
Oct 26, 2025, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா வந்தடைந்தார் ஐ.நா. பொதுச் சபைத் தலைவர்!

Web Desk by Web Desk
Jan 22, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78-வது கூட்டத் தொடரின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக இன்று காலை இந்தியா வந்தடைந்தார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். பின்னர், ஐ.நா. பொதுச் சபைத் தலைவரிடம் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதன் பேரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78-வது கூட்டத் தொடரின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் 5 நாள் பயணமாக இன்று காலை இந்தியாவுக்கு வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது, பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பலதரப்பு விவகாரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருடன், டென்னிஸ் பிரான்சிஸ் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியா – ஐ.நா. இடையிலான உறவுகளை முன்னேற்றுவதற்கும், இந்தியாவின் முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் இப்பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்” என்று தெரிவித்திருக்கிறது.

இந்த விஜயத்தின்போது, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு டென்னிஸ் அஞ்சலி செலுத்துகிறார். மேலும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் இந்தியாவின் முன்னேற்றங்கள் குறித்த வட்ட மேஜை கூட்டத்திலும் பிரான்சிஸ் கலந்து கொள்கிறார்.

தொடர்ந்து, பன்முகத்தன்மை மற்றும் அமைதி, செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த இந்திய உலக விவகார கவுன்சிலில் புதன்கிழமை பொது உரையை நிகழ்த்துவார். மேலும், ஜெய்ப்பூர் மற்றும் மும்பைக்கு பயணம் செய்யும் பிரான்சிஸ், மும்பையில் உள்ள 26/11 நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர், தேசிய பங்குச் சந்தைக்குச் சென்று, அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்ட சீர்திருத்தப் பன்முகத்தன்மைக்கான புதிய நோக்குநிலை குறித்து உரையாற்றுவார். ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பிரான்சிஸ் பங்கேற்கிறார்.

Tags: United Nations General AssemblyPresident Dennis Francisarrived India
ShareTweetSendShare
Previous Post

குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Next Post

பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் : ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies