குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
Jun 15, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 22, 2024, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 12 மாணவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அம்மாநில உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறது.

குஜராத் மாநிலம் வதோதராவில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியா்கள் தலைமையில் 30 மாணவர்கள் வதோதராவின் புறநகர் பகுதியில் உள்ள ஹர்னி ஏரிக்கு கடந்த 18-ம் தேதி சுற்றுலா சென்றனர். அங்கு, 34 பேரும் ஒரே படகில் பயணம் செய்து ஏரியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் ஏரியில் விழுந்து தத்தளித்தனர். இவர்களது கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஏரியில் குதித்து காப்பாற்ற முயன்றனர்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், 18 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மீதி 12 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக குஜராத் காவல் துறையினர் 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். இந்த சூழலில், மேற்கண்ட விபத்து தொடர்பான விவகாரத்தை குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, “படகில் பயணித்த குழந்தைகளுக்கு உயிர் காக்கும் மிதவை ஆடைகள் கூட வழங்கப்படவில்லை. சிறிதும் பொறுப்பற்று இவ்வாறு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே, ஜனவரி 29-ம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும். அதற்குள் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: high courtGujratBoat accidentAsked action report
ShareTweetSendShare
Previous Post

பிரான் பிரதிஷ்டை: துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து!

Next Post

இந்தியா வந்தடைந்தார் ஐ.நா. பொதுச் சபைத் தலைவர்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies