பிரான் பிரதிஷ்டை: துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Sep 14, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான் பிரதிஷ்டை: துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 22, 2024, 04:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரலாற்று நகரமான அயோத்தியின் இராம ஜென்ம பூமியில் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டையின் சகாப்த தினத்தை முன்னிட்டு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருக்கும் இராமர் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை வெகு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை செய்தார். நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரேத மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் பங்கேற்று சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.

விழாவில், முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களும், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரை பிரபலங்களும், சச்சின் தெண்டுல்கர், அஜய் ஜடேஜா உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களும், அரசியல் கட்சிகளின் தலைவரும் கலந்து கொண்டு ஸ்ரீராமரை தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், அயோத்தி இராம ஜென்ம பூமியில் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “தேசத்தின் பெருமையை மீண்டும் எழுப்புவதைக் குறிக்கும் ஒரு கொண்டாட்ட தருணத்தைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 11 நாட்கள் கடுமையான அனுஷ்டானத்திற்குப் பிறகு, அயோத்தியில் இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழாவை வழிநடத்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

ஜனவரி 22, நாகரீகப் பாதையில் தெய்வீகத்துடன் ஒரு முயற்சியின் தருணமாக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், பிரபு ஸ்ரீராமின் நேர்மை, மன்னிப்பு, துணிச்சல், பணிவு, அக்கறை, கருணை ஆகிய பண்புகளை வாழ்வின் ஒரு வழியாகப் புகுத்துவதற்கு நாட்டு மக்கள் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: congratulates peopleayodhyaJagdeep DhankharVice PresidentRam MandirPran Pratishta
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிப்பு!

Next Post

குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies