இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம்: நடிகர் ரஞ்சித் புகழாரம்!
Jul 24, 2025, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம்: நடிகர் ரஞ்சித் புகழாரம்!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றிருக்கும் நிலையில், இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம் என்று நடிகர் ரஞ்சித் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா பிரான் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஸ்ரீராமரை தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வகையில், திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் கலந்துகொண்டு நேரலையில் கும்பாபிஷேகத்தை கண்டு களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித், “இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம். அனைவரும் எதிர்பார்த்த அற்புதமான நாள். இதில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. இது நம் பூமி. இதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சியை பார்க்க விடாமல் மின்சாரம் துண்டிப்பு பிரச்சனை எல்லாம் தேவையற்றது, கண்டிக்கத்தக்கது. இது இறக்குமதி செய்யப்பட்ட சுவாமி இல்லை. இது என் தாய் உணர்வு. கடவுளுக்கு எல்லை இல்லை. இதனை எதிர்க்கும் அன்னிய கைக்கூலிகள் இருக்கத்தானே செய்கின்றனர்.

சுதந்திரத்திற்கு பல உயிர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதம் நமது இந்து மதம். அனைத்து மதத்தையும் ஏற்கும் மதமும் இந்து மதம்தான். அடுத்த தலைமுறைக்கு இந்த பகுத்தறிவை ஊட்டியதே எதிர்ப்பவர்கள்தான்” என்றார்.

தொடர்ந்து பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், “500 ஆண்டு காலம் போராடி இன்று வெற்றி விழா நடைபெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் இராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்கள்.

நிறைய மாநிலங்களில் அரசு விடுமுறை அளித்திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் இந்து விரோத அரசு நடைபெறுகிறது. இந்த அரசு வன்முறையை விரும்புகிறது. இராமரின் விளையாட்டு தொடங்கி விட்டது. இந்த தேர்தலில் இந்து விரோத தி.மு.க. அரசுக்கு இராமர் பாடம் புகட்டுவார்” என்றார்.

Tags: PraisedAyodyaActor Ranjith
ShareTweetSendShare
Previous Post

ஹனுமானே என்னை அழைத்தது போல இருந்தது: நடிகர் சிரஞ்சீவி!

Next Post

உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழ்த்துகள்… ஜெய் ஸ்ரீராம்: பிரதமர் மோடிக்கு விஷால் வாழ்த்து!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies