இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம்: நடிகர் ரஞ்சித் புகழாரம்!
Jul 29, 2026, 12:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம்: நடிகர் ரஞ்சித் புகழாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றிருக்கும் நிலையில், இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம் என்று நடிகர் ரஞ்சித் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா பிரான் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஸ்ரீராமரை தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வகையில், திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் கலந்துகொண்டு நேரலையில் கும்பாபிஷேகத்தை கண்டு களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித், “இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம். அனைவரும் எதிர்பார்த்த அற்புதமான நாள். இதில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. இது நம் பூமி. இதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சியை பார்க்க விடாமல் மின்சாரம் துண்டிப்பு பிரச்சனை எல்லாம் தேவையற்றது, கண்டிக்கத்தக்கது. இது இறக்குமதி செய்யப்பட்ட சுவாமி இல்லை. இது என் தாய் உணர்வு. கடவுளுக்கு எல்லை இல்லை. இதனை எதிர்க்கும் அன்னிய கைக்கூலிகள் இருக்கத்தானே செய்கின்றனர்.

சுதந்திரத்திற்கு பல உயிர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதம் நமது இந்து மதம். அனைத்து மதத்தையும் ஏற்கும் மதமும் இந்து மதம்தான். அடுத்த தலைமுறைக்கு இந்த பகுத்தறிவை ஊட்டியதே எதிர்ப்பவர்கள்தான்” என்றார்.

தொடர்ந்து பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், “500 ஆண்டு காலம் போராடி இன்று வெற்றி விழா நடைபெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் இராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்கள்.

நிறைய மாநிலங்களில் அரசு விடுமுறை அளித்திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் இந்து விரோத அரசு நடைபெறுகிறது. இந்த அரசு வன்முறையை விரும்புகிறது. இராமரின் விளையாட்டு தொடங்கி விட்டது. இந்த தேர்தலில் இந்து விரோத தி.மு.க. அரசுக்கு இராமர் பாடம் புகட்டுவார்” என்றார்.

Tags: PraisedAyodyaActor Ranjith
ShareTweetSendShare
Previous Post

ஹனுமானே என்னை அழைத்தது போல இருந்தது: நடிகர் சிரஞ்சீவி!

Next Post

உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழ்த்துகள்… ஜெய் ஸ்ரீராம்: பிரதமர் மோடிக்கு விஷால் வாழ்த்து!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies