இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம்: நடிகர் ரஞ்சித் புகழாரம்!
Sep 12, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம்: நடிகர் ரஞ்சித் புகழாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 10:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றிருக்கும் நிலையில், இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம் என்று நடிகர் ரஞ்சித் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா பிரான் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஸ்ரீராமரை தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வகையில், திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் கலந்துகொண்டு நேரலையில் கும்பாபிஷேகத்தை கண்டு களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித், “இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம். அனைவரும் எதிர்பார்த்த அற்புதமான நாள். இதில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. இது நம் பூமி. இதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சியை பார்க்க விடாமல் மின்சாரம் துண்டிப்பு பிரச்சனை எல்லாம் தேவையற்றது, கண்டிக்கத்தக்கது. இது இறக்குமதி செய்யப்பட்ட சுவாமி இல்லை. இது என் தாய் உணர்வு. கடவுளுக்கு எல்லை இல்லை. இதனை எதிர்க்கும் அன்னிய கைக்கூலிகள் இருக்கத்தானே செய்கின்றனர்.

சுதந்திரத்திற்கு பல உயிர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதம் நமது இந்து மதம். அனைத்து மதத்தையும் ஏற்கும் மதமும் இந்து மதம்தான். அடுத்த தலைமுறைக்கு இந்த பகுத்தறிவை ஊட்டியதே எதிர்ப்பவர்கள்தான்” என்றார்.

தொடர்ந்து பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், “500 ஆண்டு காலம் போராடி இன்று வெற்றி விழா நடைபெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் இராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்கள்.

நிறைய மாநிலங்களில் அரசு விடுமுறை அளித்திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் இந்து விரோத அரசு நடைபெறுகிறது. இந்த அரசு வன்முறையை விரும்புகிறது. இராமரின் விளையாட்டு தொடங்கி விட்டது. இந்த தேர்தலில் இந்து விரோத தி.மு.க. அரசுக்கு இராமர் பாடம் புகட்டுவார்” என்றார்.

Tags: PraisedAyodyaActor Ranjith
Share
Tweet
SendShare
Previous Post

ஹனுமானே என்னை அழைத்தது போல இருந்தது: நடிகர் சிரஞ்சீவி!

Next Post

உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழ்த்துகள்… ஜெய் ஸ்ரீராம்: பிரதமர் மோடிக்கு விஷால் வாழ்த்து!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies