ராமஜென்ம பூமியான அயோத்தியில் பால ராமர் கோவில் பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று, ராமர் கோவிலில், பால ராமர் விக்கிரகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார்.
இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அரசியல் தலைவர்கள், முக்கிய விருந்தினர்கள், ஆன்மீகவாதிகள், மடாதிபதிகள், பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளை நெல்லை பாளையங்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் எல்.இ.டி திரை அமைத்து பொது மக்களுக்குக் காண்பிக்க முடிவு செய்யப்பட்டது.
அ அப்போது எல்.இ.டி. அமைக்க உள்ள திருமண மண்டபத்தைக் காவல்துறையினர் திடீரெனப் பூட்டி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கொதித்துப் போய் பூட்டப்பட்ட திருமண மண்டபம் முன்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஸ்ரீராம நாமமும் பாடினர்.